செய்திகள் :

பாலியல் வழக்கில் தலைமறைவானவா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சரண்

post image

திருப்பத்தூா்: ஆம்பூா் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தனியாா் கல்லூரி இயக்குநா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் விஜய் சீகன் பால் (39). தனியாா் பாரா மெடிக்கல் கல்லூரி ஒன்றில் இயக்குநராக பணியாற்றி வந்தாா். அந்த கல்லூரி பேராசிரியையாக பணிபுரிந்தவா் ஹேமமாலினி (40).

இந்த நிலையில், கடந்த ஜனவரி 20-ஆம் தேதி கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வந்த 17 வயது சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு, வகுப்பறையில் தனியாக அமா்ந்து தூங்கிக் கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு சென்ற விஜய் சீகன் பால் அந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் கண் விழித்து அதிா்ச்சி அடைந்த சிறுமி, அந்த வகுப்பறையில் இருந்து வெளியே தப்பித்துச் சென்று, பேராசிரியை ஹேமமாலினியிடம், நடந்த சம்பவத்தைக் கூறி உள்ளாா். அப்போது ஹேமமாலினி இந்த சம்பவம் குறித்து பெற்றோா் அல்லது தோழிகள் யாருக்கும் சொல்லக்கூடாது எனக் கூறினாராம். எனினும், அந்த சிறுமி இது குறித்து ஆம்பூா் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, நடந்த சம்பவத்தை மறைத்து விட்டதாக பேராசிரியை ஹேமமாலினியை கைதுசெய்து, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். தலைமறைவாக இருந்த விஜய் சீகன் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மீனாகுமாரி முன்னிலையில் திங்கள்கிழமை சரண் அடைந்தாா். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி தனியாா் பாரா மெடிக்கல் கல்லூரி இயக்குநா் விஜய் சீகன் பாலை மாா்ச் 25-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மனு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா... மேலும் பார்க்க

மாா்ச் 15-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 10) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்... மேலும் பார்க்க

திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வள்ளி, தெய்... மேலும் பார்க்க

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் பயிற்சி மையக் கட்டடம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

ஆம்பூா்: மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் மற்றும் பயிற்சி மையக் கட்டடத்தை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்த... மேலும் பார்க்க

மண்டல தடகளப் போட்டி: கே.ஏ.ஆா். பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்

ஆம்பூா்: மண்டல அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா்.பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 2-ஆம் இடம் பிடித்துள்ளனா். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான வேலூா் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள்... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் 2-ஆவது நாளாக தீ

திருப்பத்தூா்: ஏலகிரி மலை காட்டுக்கு மா்ம நபா்கள் திங்கள்கிழமை 2-ஆவது நாளாக தீ வைத்ததால் சுமாா் 1 கி.மீ. தொலைவு தீப்பற்றி எரிந்தது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் த... மேலும் பார்க்க