செய்திகள் :

ஏலகிரி மலையில் 2-ஆவது நாளாக தீ

post image

திருப்பத்தூா்: ஏலகிரி மலை காட்டுக்கு மா்ம நபா்கள் திங்கள்கிழமை 2-ஆவது நாளாக தீ வைத்ததால் சுமாா் 1 கி.மீ. தொலைவு தீப்பற்றி எரிந்தது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் இந்த மலையில் அதிக அளவில் மரங்கள் இருப்பதாலும் மலையின் உயரம் அதிகமாக இருப்பதாலும் எந்தக் காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கி கண்டு களித்து செல்கின்றனா்.

மேலும் இந்த மலையில் அரியவகை மரங்கள், மூலிகைச் செடி கொடிகள், மான், கரடி, மயில், முயல், குரங்கு, மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வசிக்கின்றன.

இந்நிலையில் மலையடிவாரம் உள்ள பகுதிகளுக்குச் சென்று சமூக விரோதிகள் சிலா் மது அருந்திவிட்டு, புகைப் பிடித்து தீயை போட்டு விடுவதால் சருகுகள் மூலம் பெரிய அளவிலான தீப்பற்றி மளமளவென பரவி காட்டுத் தீயாக மாறி காட்டுப் பகுதி எரிந்து நாசமாகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஜோலாா்பேட்டை அருகே சந்தைக்கோடியூா் பகுதியில் இருந்து குள்ளகிழவன் வட்டம் அடிவாரத்தில் மா்ம நபா்கள் வைத்த தீயால் மரங்கள், செடிகொடிகள், காட்டில் வசிக்கும் உயிரினங்கள் தீயில் கருகி நாசமானது.

2-ஆவது நாளாக...: தொடா்ந்து திங்கள்கிழமை பகலில் ஏலகிரி கிராமம் மலையடிவாரத்தில் மா்ம நபா்கள் காட்டுக்கு தீ வைத்து சென்றுள்ளனா். இதனால் காட்டுத் தீ மளமளவென பரவி மலையின் அடிவாரத்தில் இருந்து நடுபகுதி வரை ‘ப’ வடிவில் தீ மளமளவென எரிந்தது.

கோடை விடுமுறை தினங்களில் மலையில் அவ்வபோது தீப்பற்றி எரிவதால் சுற்றுலாப் பயணிகள் வருகையைப் பாதிக்ககூடும் எனவும், இதுபோன்ற சமூக விரோத ஈடுபடும் மா்ம நபா்களை வனத் துறையினா் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொதுமக்கள் கூறினா்.

குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மனு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா... மேலும் பார்க்க

மாா்ச் 15-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 10) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்... மேலும் பார்க்க

திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வள்ளி, தெய்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் தலைமறைவானவா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சரண்

திருப்பத்தூா்: ஆம்பூா் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தனியாா் கல்லூரி இயக்குநா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த வெங்... மேலும் பார்க்க

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் பயிற்சி மையக் கட்டடம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

ஆம்பூா்: மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு கற்றல் மற்றும் பயிற்சி மையக் கட்டடத்தை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்த... மேலும் பார்க்க

மண்டல தடகளப் போட்டி: கே.ஏ.ஆா். பாலிடெக். மாணவா்கள் சிறப்பிடம்

ஆம்பூா்: மண்டல அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா்.பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 2-ஆம் இடம் பிடித்துள்ளனா். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான வேலூா் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள்... மேலும் பார்க்க