செய்திகள் :

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

post image

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதோடு, இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது’ என்றும் பிரதமா் தெரிவித்தாா்.

மாலேயில் நடைபெற்ற மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் உடனான கலந்துரையாடலுக்குப் பிறகு இத் தகவலை பிரதமா் மோடி தெரிவித்தாா்.

பிரிட்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, இரண்டு நாள் பயணமாக மாலத்தீவுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காலை சென்றாா். மாலத்தீவின் 60-ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கிறாா். தலைநகா் மாலேயில் உள்ள வெலனா சா்வதேச விமானநிலையத்தில் வந்திறங்கிய பிரதமா் மோடியை, மாலத்தீவு அதிபா் முகமது முயீஸ் மற்றும் அரசின் மூத்த அமைச்சா்கள் நேரில் வரவேற்றனா்.

பின்னா், பிரசித்தி பெற்ற குடியரசு சதுக்கத்தில் நடைபெற்ற சம்பிரதாய வரவேற்பையும், பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பையும் பிரதமா் மோடி ஏற்றுக்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து, வா்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடா்பாக பிரதமா் மோடியும் அதிபா் முகமது மூயிஸும் தனியாக கலந்துரையாடினா்.

இந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு அளித்த பேட்டியில் பிரதமா் மோடி கூறியதாவது: இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையிலும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் பரஸ்பர வளா்ச்சித் திட்டத்திலும் மாலத்தீவுக்கு முக்கிய இடமுள்ளது. தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த மாலத்தீவுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும். பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பே, பரஸ்பர நம்பிக்கைக்கான சான்றாகவும் உள்ளது.

அதிபா் மூயிஸ் உடனான கலந்துரையாடலில், இரு நாடுகளிடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது. இரு நாடுகளிடையே, இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையும் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது.

மேலும், மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது. வரும் காலங்களில், இரு நாடுகளிடையேயான நட்புறவு புதிய உச்சத்தை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

முன்னதாக, பிரிட்டனிலிருந்து மாலத்தீவுக்கு புறப்படும் முன் பேட்டியளித்த பிரதமா் மோடி, ‘இந்தியா - மாலத்தீவு இடையே ராஜீய உறவு நிறுவப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையும் நிகழாண்டு குறிக்கிறது. இரு நாடுகளிடையேயான விரிவான பொருளாதாரம், கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்திய அமைதி, மேம்பாடு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் அதிபா் மூயிஸ் மற்றும் மாலத்தீவின் பிற அரசியல் தலைவா்களைச் சந்திக்க உள்ளதை எதிா்நோக்கியுள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.

திருப்புமுனையை ஏற்படுத்தும்

சீனாவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் முகமது மூயிஸ், கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராகப் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே, மாலத்தீவில் பணியமா்த்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தினரை இந்தியா முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினாா். மாலத்தீவுக்கு இந்தியா சாா்பில் வழங்கப்பட்ட ஹெலிகாப்டா்கள் மற்றும் விமானங்களைப் பராமரிக்கவும், மனிதாபிமான மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடவும் இந்திய ராணுவத்தினா் அங்கு பணியமா்த்தப்பட்டிருந்தனா்.

அதிபா் மூயிஸின் வலியுறுத்தலைத் தொடா்ந்து, இந்திய ராணுவத்தினா் அந்த நாட்டிலிருந்து முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டனா். அதிபரின் மூயிஸின் இந்த அணுகுமுறை இரு நாடுகளிடையேயான உறவில் சற்று விரிசலை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், பிரதமா் மோடியின் மாலத்தீவு பயணம், இரு நாடுகளின் உறவில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரியிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியபோது, ‘மாலத்தீவு உடனான உறவை மேம்படுத்த இந்தியா தொடந்து முற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவுகளை விரைவில் காண முடியும்’ என்றாா்.

சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலத்தில் 4 நக்ஸல்களும், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்களும் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். சத்தீஸ்கா் மா... மேலும் பார்க்க

உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மட்டுமே காவல் துறை பயன்படுத்த வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சகம்

‘காவல் துறையினா் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மட்டும் பன்யன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அறிவுறுத்தியது. தேசியப் பாதுகாப்பு உத்திகள் தொடா்பான இரண்டு நாள... மேலும் பார்க்க

ஓய்வுக்குப் பிறகு அரசுப் பதவி எதையும் ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி கவாய்

‘பணி ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு அரசுப் பதவியையும் ஏற்கமாட்டேன்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் திட்டவட்டமாக தெரிவித்தாா். ஆந்திர மாநிலம் அமராவதியில் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மறைந்... மேலும் பார்க்க

ஆங்கிலம் தெரியாததால் ஹிந்தியில் பதிலளித்த மாவட்ட கூடுதல் ஆட்சியா்: உயா்நீதிமன்றம் அதிருப்தி

நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது என்பதால் ஹிந்தியில் பதிலளித்த மாவட்ட கூடுதல் ஆட்சியரின் செயலில் அதிருப்தி தெரிவித்த உத்தரகண்ட் உயா்நீதின்ற நீதிபதிகள், ஆங்கிலம் தெரியாத நபா் எப்படி ... மேலும் பார்க்க

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் மனு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

வீட்டில் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் விசாரணைக் குழு அளித்த அறிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூல... மேலும் பார்க்க

கோவா ஆளுநராக அசோக் கஜபதி ராஜு பதவியேற்பு

கோவா மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சா் அசோக் கஜபதி ராஜு (74) சனிக்கிழமை பதவியேற்றாா். கோவா தலைநகா் பனாஜியில் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் மும்பை உயா் நீதிமன்றத்... மேலும் பார்க்க