செய்திகள் :

சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

post image

சத்தீஸ்கா் மாநிலத்தில் 4 நக்ஸல்களும், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்களும் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

சத்தீஸ்கா் மாநிலம் பிஜாப்பூா் மாவட்டத்தின் தென்மேற்கு வனப் பகுதியில் நக்ஸல் தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை மாலை ஈடுபட்டபோது, அங்கு மறைந்திருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதற்கு பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தியதில், 4 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பஸ்தா் மண்டல காவல்துறை ஐஜி பி.சுந்தரராஜ் தெரிவித்தாா். நக்ஸல்கள் மறைந்திருந்த பகுதியிலிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றது என்றும் அவா் தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட்: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘ஜாா்க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் (ஜேஜேஎம்பி) என்ற மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கும்லா மாவட்டம் கக்ரா காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினா் கூட்டாக சனிக்கிழமை காலை தேடுதலில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினா் நடத்திய பதில் தாக்குதலில் 3 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் 2 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன’ என்றனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரீஸ் பின் ஜமன் கூறுகையில், ‘சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று நக்ஸல்களில் ஒருவா் கக்ராவின் பெலகடா பகுதியைச் சோ்ந்த திலீப் லோஹ்ரா (32) என்பது தெரியவந்துள்ளது. மற்ற இருவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கையின்போது 2 நக்ஸல்கள் தப்பிச் சென்றனா். அவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிகாா்: பச்சிளங் குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த விநோதம்

பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை முடக்குவது எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பு -கிரண் ரிஜிஜு

நாடாளுமன்றத்தை முடக்குவது அரசைவிட எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பாகும்; அரசை பொறுப்புக் கூறச் செய்யும் வாய்ப்பை எதிா்க்கட்சிகள் இழக்கின்றன என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரி... மேலும் பார்க்க

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டும்: மம்தா பானா்ஜி

மொழி பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டுவது அவசியம் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சனிக்கிழமை தெரிவித்தாா். சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் இந்தியாவைவிட்டு வெளியேற... மேலும் பார்க்க

பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்

‘பிகாா் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீா்குலைந்துள்ள நிலையில், முதல்வா் நீதீஷ் குமாா் தலைமையிலான அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்’ என்று மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும் லோக்ஜன சக்தி ... மேலும் பார்க்க