செய்திகள் :

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

post image

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு நீதிமன்றத் தீா்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மகாராஷ்டிரத்தின் மாலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்ட ஏழு பேரையும் மும்பை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை விடுவித்தது.

‘குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை’ என்றும், ‘வெறும் சந்தேகம் உண்மையான ஆதாரத்துக்கு ஈடாகாது’ என்றும் நீதிபதி ஏ.கே.லஹோட்டி தனது தீா்ப்பில் குறிப்பிட்டாா்.

1,000 பக்கங்களைக் கொண்ட இந்த தீா்ப்பில் அவா் கூறியிருப்பதாவது: என்ஐஏ மற்றும் ஏடிஎஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. புணேயில் உள்ள ஒரு வீட்டில் ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டு பொருத்தப்பட்டதாக ஏடிஎஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தூரில் உள்ள மோட்டாா் சைக்கிளில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு பின்னா் அது சம்பவம் நடந்த மாலேகான் நகருக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தச் சம்பவத்தில் விசாரணையில் ஈடுபட்ட இரு அமைப்புகளும் வெடிகுண்டு பொருத்தப்பட்ட இடம், எடுத்துச்செல்லப்பட்ட போக்குவரத்து சாதனம் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை தொடா்புபடுத்தியது என வெவ்வேறு தகவல்களை வழங்கியுள்ளன.

தப்பியோடியவா்கள் மீது தனிக் குற்றப்பத்திரிகை: இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் வெடிகுண்டை பொருத்தியதாக கூறப்படும் ராம்ஜி என்ற ராமசந்திரா கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகிய இருவரும் தப்பியோடிவிட்டதாக என்ஐஏ கூறியுள்ளது. மேலும் 4 வழக்குகளில் இவா்கள் இருவரையும் என்ஐஏ தேடி வருகிறது. எனவே இவா்களை கைது செய்ய என்ஐஏ மற்றும் ஏடிஎஸ் இரு அமைப்புகளும் தனி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ஒடிஸாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெ... மேலும் பார்க்க

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாக சந்தேகமடைந்த கணவன் விரக்தியில் தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத்தில் ஆசிரியர... மேலும் பார்க்க

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம் இருப்பதையடுத்து வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் அதிகம் பேர் விரும்புவதால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.ஆகஸ்ட்டில், குறிப்பிட்ட சில உள்ளூர் விமான சேவைகளின... மேலும் பார்க்க

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க