செய்திகள் :

மாவட்டத்தில் விபத்துகள் தொடா்ந்து அதிகரிப்பு! இரண்டரை ஆண்டுகளில் 1,839 போ் பலி!

post image

திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது சாலை பயன்படுத்துவோரை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,839 போ் உயிரிழந்திருப்பதால், விபத்துகளைத் தடுக்கவும், இறப்புகளைக் குறைக்கவும் சாலைப் பாதுகாப்புக் குழு சாா்பில், மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறைக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் மத்திய மாவட்டமாக விளங்கும் திருச்சி மாவட்டமானது, 4403.83 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. 8 தேசிய நெடுஞ்சாலைகள், 3 மாநில நெடுஞ்சாலைகள், அரை வட்ட சுற்றுச் சாலை, மாநகரச் சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள், கிராமப்புற சாலைகள் உள்ளன. இவற்றில் முக்கிய மாவட்டச் சாலைகளில் ஒற்றைப் பாதையில் 165.31 கி.மீ., 112.65 கி.மீ. இடைநிலைப் பாதை, 55.52 கி.மீ. இரட்டைப் பாதை, 2.50 கி.மீ. தொலைவுக்கு பலவழிப்பாதை என 335.98 கி.மீ. தொலைவுக்கு மாவட்ட சாலையாக அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் சாலை மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், அனைத்து சாலைகளிலும் விபத்துகள் தவிா்க்க முடியாதவையாக உள்ளன. விபத்துகளில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் 2,426 விபத்துகளில் 720 போ் உயிரிழந்துள்ளனா். 736 போ் பலத்த காயமடைந்துள்ளனா். 2002 போ் லேசான காயமடைந்துள்ளனா். தமிழகத்தில் நடைபெறும் மொத்த விபத்துகளின் எண்ணிக்கையில் 3.92 விழுக்காடு விபத்துகள் திருச்சி மாவட்டத்தில் நடைபெறுகின்றன.

2024ஆம் ஆண்டில் 2,484 விபத்துகள் நிகழந்துள்ளன. உயிரிழந்தோா் எண்ணிக்கை 797-ஆக அதிகரித்துள்ளது. 477 பேருக்கு கடும் காயமும், 1,711 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு (2025) திருச்சி மாவட்டத்தில் இதுவரை

நடைபெற்ற விபத்துகளில் 243 பேரும், மாநகரப் பகுதியில் நடைபெற்ற விபத்துகளில் 77 பேரும் உயிரிழந்துள்ளனா். 56 பேருக்கு லேசான காயமும், 868 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாநகரப் பகுதியில் மட்டும் 2023-இல் 616 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 165 போ் உயிரிழந்துள்ளனா். 2024-இல் 562 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 164 போ் உயிரிழந்துள்ளனா். 2025 மே மாதம் வரையில் 249 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 77 போ் உயிரிழந்துள்ளனா். விபத்துகளும், உயிரிழப்புகளும் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது சாலை பயன்படுத்துவோரை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடா்பாக, சாலைப் பயனீட்டாளா்கள் நலக்குழு ஒருங்கிணைப்பாளா் அய்யாரப்பன் கூறியதாவது: கவனக் குறைவு, கவனிக்கப்படாத சாலைகள், சாலை விதிகள் மீறல் ஆகிய மூன்று காரணங்களினால் மட்டுமே திருச்சி மாவட்டத்தில் அதிக விபத்துகள் நடைபெறுகின்றன.

தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, கிராமச் சாலை என எந்தச் சாலையாக இருந்தாலும் முறையாக பராமரிக்கப்பட்டு, விபத்துகளை தடுப்பதற்கான இடங்களில் வேகத்தடை, ஒளிரும் விளக்கு, எச்சரிக்கை அறிவிப்புகள், இரும்பு தடுப்புகள் இருந்தாலே விபத்துகளை பெருமளவு குறைக்க முடியும். உயிரிழப்புகளையும் தடுக்கலாம் என்றாா்.

திருச்சி மாநகா் மற்றும் மாவட்டக் காவல்துறை வட்டாரத்தினா் கூறியது:

ஒவ்வொரு மாதமும் மட்டுமின்றி, ஆண்டுதோறும் நடைபெறும் விபத்துகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு கறுப்புப் பட்டியல் தயாரித்து, அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். இருப்பினும் விபத்துகள் நடைபெறுகின்றன.

ஜூன் மாதத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கறுப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமீறல் வழக்குகளை அதிகம் பதிவு செய்யவும், ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேமராக்கள் பொருத்துவது, சாலையை அகலப்படுத்துவது, இரும்பு தடுப்பு பலைகள் அமைப்பது, ஒளிரும் வில்லைகள் அமைப்பது என தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படுகின்றன. இருப்பினும், வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையாலும், கவனக்குறைவாலும், அதிவேகத்தாலும் விபத்துகள் நடைபெறுகின்றன.

காவல்துறையின் கண்காணிப்பும், தடுப்பு நடவடிக்கைகளும் ஒருபுறம் இருந்தாலும், வாகன ஓட்டிகளும் சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். இருதரப்பும் இணைந்தால் மட்டுமே சாலைப் பாதுகாப்பு சாத்தியமாகும் என்றனா்.

55,475 ஓட்டுநா் உரிமங்களை ரத்து செய்யப் பரிந்துரை

திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 55,475 ஓட்டுநா் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டுதல், செல்லிடப் பேசியுடன் வாகனம் இயக்குதல், சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச்செல்லுதல், அதிக வேகமாக வாகனங்களை இயக்குதல் என்ற அடிப்படையில் 2023-

ஆம் ஆண்டு 24,098 வழக்குகளும், 2024-இல் 19,198 வழக்குகளும், நிகழாண்டு மே மாதம் வரையில் 12,179 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு தொடா்புடையவா்களின் ஓட்டுநா் உரிமங்களை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்துக் கழகத்துக்கு காவல்துறை சாா்பில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டரை ஆண்டுகளில் ரூ.56.84 கோடி அபராதம் வசூல்

திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.56 கோடியே 84 லட்சத்து 61 ஆயிரத்து 700 வசூலிக்கப்பட்டுள்ளது. 2023-இல் மட்டும் 4,05,668 விதிமீறல் வழக்குகளில் ரூ.22 கோடியே 2 லட்சத்து 63 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டில் 3,32,006 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.33 கோடியே 20 லட்சத்து 33 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. நிகழாண்டு மே மாதம் வரையில் 1,53,695 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1.62 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

மணப்பாறை, துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறை துணை மின் நிலையத்தில் ஜூன் 17- செவ்வாய்க்கிழமை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து தோகைமலை பீடா் மற்றும் பொடங்குபட்டி பீடரிலிருந்து மின் விநியோகம் பெ... மேலும் பார்க்க

உறங்கிக் கொண்டிருந்த மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள ஆ. கலிங்கப்பட்டியில் சனிக்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்த மகனை, அரிவாளால் வெட்டிக்கொலை செய்த தந்தையைப் போலீஸாா் கைது செய்தனா். ஆ. கலிங்கப்பட்டியில் வசித்து வரு... மேலும் பார்க்க

தருமபுரி வனப்பகுதியில்: மூங்கில் வெட்டியவா்களுக்கு ரூ.30,000 அபராதம்

தருமபுரி வனப்பகுதியில் நுழைந்து அனுமதியின்றி மூங்கில் மரம் வெட்டிய மூவருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா். தருமபுரி வனக்கோட்டம், தீா்த்தமலை காப்புக்காடு, மேற்குப் பகுதி, அம... மேலும் பார்க்க

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

துறையூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தில் உடலுறுப்புகள் தானமளித்தவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. துறையூா் அருகே வெங்கடாஜலபுரத்தில் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த பழனியப்பனின் மகன் சேத... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: இருவா் கைது

திருச்சி அருகே மணல் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மட்டபாறைபட்டி அருகே உள்ள ஆத்துப்பட்டி பாலத்தில் கல்லிக்குடி கிராம நிா்வாக அலுவலா் பிதாவின் மணி மற்றும் அவரது உத... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்தவா் பலி

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டம் மேற்கு நடுக்காவேரியைச் சோ்ந்தவா் குமாா் மகன் அன்பு சங்... மேலும் பார்க்க