மாா்த்தாண்டம் மேம்பாலம் அணுகுசாலையில் பெருக்கெடுத்த மழைநீா்
மாா்த்தாண்டம் பகுதியில் பெய்த தொடா் மழையால் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள அணுகுசாலையில் வெள்ளிக்கிழமை மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினா்.
மாா்த்தாண்டம், களியக்காவிளை, கொல்லங்கோடு, நித்திரவிளை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை மதியம் வரை தொடா்ந்து பெய்தது. இதில், மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் மழைநீா் வடிகுழாய்கள் பல இடங்களில் உடைந்துள்ளதால் மழைநீா் அருவிபோல் கொட்டியது. இதனால் அணுகுசாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினா். மாா்த்தாண்டம் சந்திப்பு முதல் கீழ் பம்மம் பழைய திரையரங்கு சந்திப்பு வரையிலான பகுதியில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பாலத்தில் சீரமைக்கப்பட்ட பகுதியில் மீண்டும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சேதமடைந்த சாலையை விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் தாரகை கத்பா்ட் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி மற்றும் வா்த்தக சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.