செய்திகள் :

மிண்டா தேவி டி-சர்ட் அணிந்து எம்பிக்கள் போராட்டம்! யார் அந்த 124 வயது மூதாட்டி?

post image

நாடாளுமன்ற வளாகத்தில் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால், அவைத் தலைவர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நான்கு வாரங்களாக பதாகைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான எம்பிக்கள் கலந்துகொண்டனர்.

இதில், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மிண்டா தேவி என்ற பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெற்ற டி-சர்ட் அணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அந்த டி-சர்ட்டின் பின்புறம் ’124 நாட் அவுட்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இந்த மிண்டா தேவி?

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில், பிகாரைச் சேர்ந்த மிண்டா தேவி என்ற பெயர் இடம்பெற்றிருந்தது.

மிண்டா தேவி என்ற 124 வயது மூதாட்டியின் பெயர் சமீபத்தில் வெளியிடப்பட்ட பிகார் வாக்காளர் வரைவு பட்டியலில் தரௌண்டா சட்டப்பேரவை தொகுதியின் கீழ் இடம்பெற்றிருந்தது.

உலகளவில் 115 வயது நபரே வயதானவர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரைவிட 9 வயது பெரியவராக இருக்கும் மிண்டா தேவி என்பவர் எப்படி உயிருடன் இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதுபோன்று, பல வாக்காளர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டு, வாக்குத் திருட்டில் பாஜக ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.

Opposition MPs protested against the Bihar Electoral Roll Special Amendment in the Parliament complex.

இதையும் படிக்க : அப்போ டாக் பாபு... இப்போ கேட் குமார்.! பூனைக்கு இருப்பிடச் சான்றிதழா..?

மாநிலங்களவையிலும் வருமான வரி மசோதா-2025 நிறைவேற்றம்!

புது தில்லி: ’வருமான வரி மசோதா 2025’ மாநிலங்களவையில் இன்று(ஆக. 12) நிறைவேற்றப்பட்டது.‘இந்தப் புதிய மசோதா வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக இருக்கும்’ என்று மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் இரு மசோதாக்கள்!

விளையாட்டு வீரர்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் வகையிலான தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2025 மாநிலங்களவையில் இன்று (ஆக. 12) நிறைவேற்றப்பட்டது.இந்திய விளையாட்டு நிர்வாகத்தில் இதுவொரு வரலாற்றுச் சிறப்ப... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்: ஆக. 18-ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையின்போது, குடியரசு துணைத் தலைவர்... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்களாக குறிப்பிடப்பட்ட நபர்கள் நேரில் ஆஜர்: உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி!

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வலிமையாக குரல் எழுப்பி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று(ஆக. 12) அதிர... மேலும் பார்க்க

“தேர்தல் ஆணையம் அல்ல; தேர்தல் திருடன்!” -ஆர்ஜேடியின் பகிரங்க விமர்சனம்!

இந்திய தேர்தல் ஆணையத்தை ‘இந்திய தேர்தல் திருடன்!’ என்று ஆர்ஜேடி கட்சி எம்.பி. சஞ்சய் யாதவ் விமர்சித்துள்ளார்.பிகாரில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் முறைகேடுக்கு எதிராக பிரசாரம்: காங்கிரஸ் ஆலோசனை!

வாக்காளர் பட்டியல் முறைகேடு மற்றும் தேர்தல் மோசடிக்கு எதிராக தேசிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி இன்று (ஆக. 12) ஆலோசனையில் ஈடுபட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைம... மேலும் பார்க்க