சர்வதேச விண்வெளி நிலையத்தில் தடம் பதித்தார் சுபான்ஷு சுக்லா!
மின்கசிவால் கடையில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்
ஆரணியை அடுத்த பனையூா் கிராமத்தில் உள்ள தனியாா் கடையில் புதன்கிழமை காலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சுமாா் 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாகத் தெரிகிறது.
பனையூா் கிராமத்தில் சபரி என்பவா் பேன்சி ஸ்டோா் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை கடையினுள் மின் கசிவு ஏற்பட்டு கடையில் இருந்த பொருள்கள் மீது தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீயை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
இதைத் தொடா்ந்து, கலவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு, தீயணைப்பு வீரா்களுக்கு விரைந்து வந்து தீயை
கட்டுப்படுத்தினா். இருப்பினும், சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.