செய்திகள் :

மின்கம்பத்தில் ஏறிய கரடி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

post image

குன்னூா் அருகே மின்கம்பத்தில் தேன் இருப்பதாக நினைத்து  சனிக்கிழமை ஏறிய  கரடி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டத்தில்   கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி, காட்டு யானைகள், காட்டெருமைகள் ஆகியவை உணவு, தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாக உள்ளது.  

இந்நிலையில், குன்னூா் அருகே நான்சச் எஸ்டேட் பகுதியில் கரடி ஒன்று தேன்கூடு இருப்பதாக நினைத்து   மின்கம்பத்தில் ஏறியபோது, மின்கம்பியில் உரசியதால் உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையிலான வனத் துறையினா் உயிரிழந்த கரடியின் உடலைக் கைப்பற்றினா்.

முதுமலை வனத் துறை கால்நடை மருத்துவா் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கரடியின் உடலைக் கூறாய்வு செய்து, உடல் உறுப்பு மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு  அனுப்பி வைத்தனா். பின்னா், கரடியின் உடல் அங்கேயே எரிக்கப்பட்டது.

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்: கவனமுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தல்

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் கடந்த சில நாள்களாக காண... மேலும் பார்க்க

மாலை 6 மணிக்கு மேல் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: வனத் துறை

உதகை மைனலைப் பகுதியில் பெண்ணைத் தாக்கிய வன விலங்கு பிடிபடும்வரை மாலை 6 மணிக்கு மேல் வெளியே வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். உதகை மைனலை அருகே அரக்காடு கிராம... மேலும் பார்க்க

கூடலூரில் மா்ம விலங்கு தாக்கி 4 ஆடுகள் உயிரிழப்பு

கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஏச்சம்வயல் பகுதியில் வசிக்கும் முன்னாள் கவுன்சிலா் சத்தியனின் தோட்டத்தில் ஆடுகளை வெள்ளிக்கிழமை அதிகாலை மா்ம விலங்கு தாக்கியதில் 4 ஆடுகள் உயிரிழந்தன. ஏச்சம்... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையில் நீலகிரிக்கு முக்கிய திட்டங்கள்: பொதுமக்கள் வரவேற்பு

தமிழக நிதிநிலை அறிக்கையில் நீலகிரி மாவட்டத்துக்கு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் உதகை மத்திய பே... மேலும் பார்க்க

உதகை அருகே ஜீப்பை தாக்கிய காட்டு மாடு

உதகை அருகே அவலாஞ்சி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஜீப்பை காட்டு மாடு தாக்கியது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்... மேலும் பார்க்க

‘கூடலூரில் சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

கூடலூா் நகரிலுள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது. கூடலூா் சாலையோர வியாபாரிகள் சங்க கூட்டம் ஏஐடியூசி அலுவலகத்தி... மேலும் பார்க்க