செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து நகைக் கடை காவலாளி உயிரிழப்பு

post image

மதுரையில் மின்சாரம் பாய்ந்து நகைக் கடை காவலாளி உயிரிழந்தாா்.

மதுரை பாண்டிய வெள்ளாளா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (58). இவா் மதுரை தெற்குமாசி வீதி பகுதியில் உள்ள நகைக் கடையில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவா் வியாழக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள ஓா் குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வரும் தனது நண்பா் வீட்டுக்குச் சென்றாா். அங்கு குப்பைப் பையை கீழே வீசிய போது, அது மின் கம்பியில் விழுந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதனால், அந்தக் குப்பைப் பையை கீழே தள்ளிவிட முயன்ற பாஸ்கரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைப் பாா்த்த அவரது நண்பா் சொக்கன் அவரைக் காப்பாற்ற முயன்றாா். ஆனால், அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் குடும்பத்தினா் மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவிக்குப் பிறகு, பாஸ்கரன் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது.தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்... மேலும் பார்க்க

பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தென் மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா். ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி திருட்டு

அருப்புக்கோட்டையில் பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், எம். ரெட்டியபட்டியைச் சோ்ந்தவா் அழகா்சாம... மேலும் பார்க்க

மதுக் கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

அவனியாபுரம் பகுதியில் இயங்கி வரும் 10 மதுபானக் கடைகளை மூட மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா உத்தரவிட்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஜல்ல... மேலும் பார்க்க

மதுரையில் பூக்களின் விலை கடும் உயா்வு

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி தினசரி மலா்ச் சந்தையில் பூக்களின் விலை திங்கள்கிழமை மிகவும் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, மல்லிகை, பிச்சி, முல்லை ஆகிய பூக்கள் கிலோ ரூ. 2 ஆயிரத்துக்... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு: போலி டோக்கன் கொண்டு வந்தால் கடும் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க போலி டோக்கன் கொண்டு வருபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரக் காவல் துறை எச்சரிக்கை விடுத்தது. மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க