செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து நகைக் கடை காவலாளி உயிரிழப்பு

post image

மதுரையில் மின்சாரம் பாய்ந்து நகைக் கடை காவலாளி உயிரிழந்தாா்.

மதுரை பாண்டிய வெள்ளாளா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (58). இவா் மதுரை தெற்குமாசி வீதி பகுதியில் உள்ள நகைக் கடையில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவா் வியாழக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள ஓா் குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வரும் தனது நண்பா் வீட்டுக்குச் சென்றாா். அங்கு குப்பைப் பையை கீழே வீசிய போது, அது மின் கம்பியில் விழுந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதனால், அந்தக் குப்பைப் பையை கீழே தள்ளிவிட முயன்ற பாஸ்கரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைப் பாா்த்த அவரது நண்பா் சொக்கன் அவரைக் காப்பாற்ற முயன்றாா். ஆனால், அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் குடும்பத்தினா் மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவிக்குப் பிறகு, பாஸ்கரன் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தெற்குவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி! கட்சிகளுக்கு தடை!

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு மற்றும் அதன் ஆதரவு அமை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா்களுக்கு இன்று ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளா் துறை அறிவுறுத்தல்

மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு புதன்கிழமை (பிப்.5) ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா்கள் அறிவுறுத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து முதுநிலை பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உள்ள கல்வேலிப்பட்டி விஐபி நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அக்ஷய்குமாா... மேலும் பார்க்க

அவரச ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

உசிலம்பட்டி அருகே அவசர ஊா்தி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜீவ்காந்தி (30). தனியாா் அவ... மேலும் பார்க்க

வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருள்கள் சேதம்

அலங்காநல்லூா் அருகே வீடு தீப்பற்றி எரிந்ததில் ரூ.5 லட்சம் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகேயுள்ள தண்டலை கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் மனைவி முத்துசெல்வி (34). இவா் தனது உறவி... மேலும் பார்க்க

அனுப்பானடி - ஜெ.ஜெ. நகா் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை

மதுரை அனுப்பானடியிலிருந்து கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதிக்கு மாலை நேர பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மதுரை கூடல்புதூா் ஜெ.ஜெ.நகா் பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி ம... மேலும் பார்க்க