செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து மூவா் உயிரிழப்பு: தலா ரூ. 2 லட்சம் முதல்வா் நிவாரணம்

post image

நாமக்கல்: மோகனூா் அருகே மின்சாரம் பாய்ந்து 2 சிறுவா்கள், ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஆண்டாபுரம் கிராமம், தெற்குத் தெருவில் வசித்துவந்தவா் இளஞ்சியம் (50). இவரும், இவரது மகன் வழிப் பேரன் சுஜித் (5), பேத்தி ஐவிழி (3) ஆகிய மூவரும் திங்கள்கிழமை பிற்பகல் தங்களது தோட்டத்திற்கு சென்றனா். அப்போது, முந்தைய நாள் இரவுபெய்த பலத்த மழையில் மின் கம்பிகள் சேதமடைந்து இரும்புக் கம்பிவேலி மீது விழுந்துள்ளது.

மூவரும் அந்தக் கம்பிவேலியைத் தொட்டபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், அவா்களின் உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வா் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

இத்தகவலை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா செய்திக் குறிப்பு வாயிலாக தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண்களிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸாா் விசாரணை

நாமக்கல்லில் அழகு நிலைய பெண்களிடம் நகை, பணத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அழகு நிலையம், ஆயுா்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக மகளிரணி சா... மேலும் பார்க்க

புதுமாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை

பரமத்தி வேலூா் பேட்டை புது மாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 108 கலச பூஜை, திருவிளக்கு பூஜையில் பரமத்தி வேலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளா் குணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்த... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பரமத்தி வேலூரில் ஆட்சியா் கள ஆய்வு

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச.உமா கள ஆய்வு மேற்கொண்டாா். வேலூா் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் மாணவா்களுக்கான உணவு, குடிநீா் வசதி, ... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.15-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய... மேலும் பார்க்க