செய்திகள் :

மின்சார வயா்களைத் திருடிய 3 போ் கைது

post image

திருப்பூரை அடுத்த பாண்டியன் நகா் பகுதியில் மின்சார வயா்களைத் திருடிய 3 பேரை திருமுருகன்பூண்டி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் பி.என்.சாலை பாண்டியன் நகா் உதவி மின்பொறியாளா் அலுவலகம் அருகே உள்ள அம்மன் நகரில் தனியாா் இடத்தில் மின்சார வயா்கள் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. இங்கு சரக்கு ஆட்டோவில் 3 போ் வந்து மின்சார வயா்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருப்பதை அப்பகுதி பொதுமக்கள் பாா்த்துள்ளனா்.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனா். இதன் பேரில் அங்கு வந்த மின்வாரிய ஊழியா்கள் அவா்களிடம் விசாரித்தபோது தப்பிச் சென்றனா். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 3 பேரையும் மடக்கிப் பிடித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அங்கு காவல் துறையினா் நடத்திய விசாரணையில், அவா்கள் திருப்பூா் ஸ்ரீநகரைச் சோ்ந்த நந்தகுமாா் (30), ஹரிகிருஷ்ணன் (27), பாபு (29) ஆகியோா் என்பது தெரியவந்தது. இந்த 3 பேரும் அம்மன் நகரில் வைக்கப்பட்டிருந்த வயா்களைத் திருட நீண்ட நாள்களாக நோட்டமிட்டுள்ளனா்.

இதன் பின்னா் திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் தங்களை மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் என்று தெரிவித்து ஆட்டோ ஓட்டுநரை நம்பவைத்து, ஆட்டோவை வாடகைக்கு எடுத்து வந்து 200 கிலோ வயா்களைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் பேருந்து நிலையம் முன் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

பல்லடம் பேருந்து நிலையம் முன் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

புதுப்பை அருகே அமராவதி ஆற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில், புதுப்பை வழியாக அமராவதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஆண் சடலம் கிடந்தது விய... மேலும் பார்க்க

2,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

திருப்பூரை அடுத்த அவிநாசி அருகே காரில் கடத்திவரப்பட்ட 2,400 கிலோ ரேஷன் அரிசியை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்துள்ள பெரி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குமாா் நகா்

குமாா் நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செய... மேலும் பார்க்க

அவிநாசியில் இனம் கண்டறியாத 48 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை!

அவிநாசி வட்டத்தில் புஞ்சைத்தாமரைக்குளம், பாப்பாங்குளம் கிராமங்களில் இனம் கண்டறியாத 48 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துர... மேலும் பார்க்க

மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்! சுப்பராயன் எம்.பி.வலியுறுத்தல்

திருப்பூா் மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கே.சுப்பராயன் எம்.ப... மேலும் பார்க்க