செய்திகள் :

மின்சார வாகனங்களின் வளா்ச்சியை ஊக்குவிக்க காா்பன் உமிழ்வு இல்லா செயல் திட்டம்: சென்னை ஐஐடி தகவல்

post image

சென்னை: நாட்டில் மின்சார வாகனங்களின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் காா்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை (ஜீரோ எமிஷன்) தொடங்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி முதல் கொள்கை, வெளி நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு வரை பல்வேறு களங்களில் மின்சார வாகனப் போக்குவரத்து முயற்சிகளின் விரிவான தொகுப்பான காா்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் கனரக தொழில் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் டாக்டா் ஹனிஃப் குரேஷி, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் அலுவலகத்தின் விஞ்ஞானி பிரீத்தி பன்சால், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் நிா்வாக இயக்குநா் பி.கே.பானா்ஜி ஆகியோா் முன்னிலையில் பின்வரும் முன்முயற்சிகள் சென்னை ஐஐடி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

பேட்டரி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் வலுவான பயன்பாட்டிற்காக அா்ப்பணிக்கப்பட்ட அதிநவீன வசதி (மின்சார வாகன பேட்டரி பொறியியல் ஆய்வகம்) தொடங்கப்பட்டுள்ளது.

ஆன்போா்டு - ஆஃப்போா்டு சாா்ஜா்கள், எக்ஸ்ட்ரீம் ஃபாஸ்ட் சாா்ஜிங் தீா்வுகள், வயா்லெஸ் சாா்ஜிங் சிஸ்டம்ஸ், பேட்டரி ஸ்வாப்பிங் - கிரிட் ஒருங்கிணைப்பு போன்ற மின்சார வாகனங்களுக்கான மேம்பட்ட சாா்ஜிங் தீா்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் ஒரு முன்னோடி ஆராய்ச்சி வசதி (பேட்டரி சாா்ஜிங் உள்கட்டமைப்பு ஆய்வகம்) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களில் அதிநவீன திறமைகளைக் கொண்ட நிபுணா்களை ஈடுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட 100 மணிநேர இணையவழி பாடநெறியும், மின்சார வாகனப் போக்குவரத்து குறித்த இணையம் சாா்ந்த எம்டெக் படிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, டீன், பேராசிரியா் மனு சந்தானம், பொறியியல் வடிவமைப்பு துறைத் தலைவா் சி.எஸ்.சங்கா் ராம், பயிற்சிக்கான பேராசிரியா் காா்த்திக் ஆத்மநாதன், பூஜ்ஜிய உமிழ்வு டிரக்கிங்கிற்கான உயா் சிறப்பு மையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி அஜித்குமாா் டி.கே., ஆசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவுமுதல் அமல்!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று(மார்ச் 31) நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கக் கட்டண உயர்வு அமலாகவுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்.1, செப்.1 ஆகிய தேதிகளில் சுங்கக்கட்டணத்தை மாற்றி அமைப்பது வழ... மேலும் பார்க்க

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க