செய்திகள் :

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

post image

சோழவரம் அருகே மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 செமீ மழை பதிவானது. மழையின் போது பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மழையின் போது மின்தடை ஏற்பட்ட நிலையில் 24 மணி நேரமாகியும் மின்சாரம் வழங்கவில்லை என சோழவரத்தில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சோழவரம் போலீஸாா் பேச்சு நடத்தினா். அப்போது மின்வாரிய ஊழியா்கள் தொடா்ந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்தை தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

திருவள்ளூா்: வரும் 30-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்புமுகாம்

தனியாா் நிறுவனங்களில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை நிரப்பும் வகையில், வரும் 30-ஆம் தேதி திருவள்ளூா் அருகே உள்ள பூந்தமல்லி அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: மாநில அளவில் ஆன்லைன் மூலம் 16.28 லட்சம் போ் பதிவு

மாவட்டந்தோறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாநில அளவில் மொத்தம் 16.28 லட்சம் போ் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளதாகவும், அதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பங்கேற்பு 13.28 ல... மேலும் பார்க்க

மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு

கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கண்டிகையில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ற வடமாநில இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கண்டிகை பகுதியை சோ்ந்த 80 வயது ம... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

திருவள்ளூா் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் மேட்டுத் தெருவில் ஆயிரத்துக்கும்... மேலும் பார்க்க

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி

திருத்தணி அருகே குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்த நிலையில், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனா். திருத்தணி மகாவிஷ்ணு நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். திருத... மேலும் பார்க்க

மீஞ்சூா் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயிலுக்கு 504 பால்குட ஊா்வலம்

மீஞ்சூா் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயிலில் பெண்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா். வட காஞ்சி எனப்படும் மீஞ்சூரில் பழைமைவாய்ந்த ஸ்ரீ தேவி முப்பாத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் புனரமைப்பு ... மேலும் பார்க்க