செய்திகள் :

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

post image

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் மின்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை நடத்திய அதிரடி சோதனை மேற்கொண்டதில், கணக்கில் காட்டப்படாத ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது பினாமி என்று சந்தேகிக்கப்படும் சதீஷ் வீட்டில் இருந்து ரூ.2,18 கோடி ரொக்கத்தையும் பறிதல் செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் மின்துறை உதவி கோட்டப் பொறியாளராக பணியாற்றி வரும் அம்பேத்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு தொடர்புடைய 10 இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், சட்டவிரோதமாகச் சம்பாதித்ததில் செர்லிங்கம்பள்ளயில் ஒரு குடியிருப்பு, கச்சிபவுலியில் ஆறு தளம் கொண்ட கட்டடம், 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அம்தார் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம், ஹைதராபாத்தில் ஆறு பிரதான குடியிருப்பு திறந்தவெளி நிலங்கள், நர்குடாவில் 1,000 சதுர அடி விவசாய நிலம், இரண்டு நான்கு சக்கர வாகனங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கி வைப்புத்தொகைகள் உள்பட கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும், அவரது பினாமி என்று சந்தேகிக்கப்படும் சதீஷ் வீட்டில் இருந்து ரூ.2,18 கோடியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிதல் செய்னர்.

அம்பேத்கர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி சொத்துக்களை வாங்கியிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு ரூ.200 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகாரி மீது ஏற்கனவே ஊழல் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறினார்.

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

Ambedkar is suspected of amassing wealth disproportionate to his known sources of income, allegedly in collusion with other officials. We also suspect that multiple properties have been registered under benami names, and inquiries are underway to identify the actual beneficiaries

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதையொட்டி அவருக்... மேலும் பார்க்க

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்த செய்யறிவு(ஏஐ) சர்ச்சை விடியோவை உடனடியாக நீக்குமாறு காங்கிரஸூக்கு பாட்னா உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்த... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

கோவா மாநிலம் கனகோனாவைச் சேர்ந்த 59 வயது முதியவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் ரூ. 80 லட்சம் பணத்தை இழந்துள்ளார். 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடியால் பலரும் பாதிக்கப்பட்டு தங்கள் பணத்தை இழந்து வ... மேலும் பார்க்க

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

டிஜிட்டல் அரெஸ்ட் எனும் இணையவழி மோசடியால் ஹைதராபாத்தைச் சேர்ந்த 76 வயது ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவர் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடி தற்ப... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டதாகக் கூறியதைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நிராகரித்துள்ளார். மத்திய அரசு ஏற்பாடு செய்த ஹ... மேலும் பார்க்க

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூன்று வாரங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு கனரக வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஜம்முவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து முக்கியமான நெடுஞ்ச... மேலும் பார்க்க