செய்திகள் :

மின் கம்பத்தில் ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

post image

செய்யாறு அருகே மனம் நலம் பாதிக்கப்பட்ட இளைஞா் புதன்கிழமை உயா் கோபுர மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அரசங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் சுரேந்தா் என்கிற இமான் (20).

இவா், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். மேலும், சில நாள்களாக அவருக்கு மன நல பாதிப்பு அதிகமானதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே மின் விளக்கு கம்பத்தில் திடீரென ஏறினாா். இதைப் பாா்த்த கிராம மக்கள் கூச்சலிட்டனா்.

தகவலறிந்த செய்யாறு தீயணைப்பு வீரா்கள், தூசி போலீஸாா் மற்றும் வெம்பாக்கம் வருவாய்த் துறையினா் வந்து, இளைஞரை கீழே இறங்கும் படி ஒலி பெருக்கி மூலம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆனால், இளைஞா் சுரேந்தா் இறங்க மறுத்ததோடு, பேருந்து நிறுத்தம் அருகே அம்பேத்கா் சிலையை வைக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தாா். அதற்கு அங்கிருந்த அரசு அதிகாரிகள், அனுமதியின்றி சிலை வைக்க முடியாது என விளக்கம் அளித்தனா்.

காலை 8 மணிக்கு மின்கம்பத்தில் ஏறிய இளைஞா் பிற்பகல் 3 மணி வரை கீழே இறங்கவில்லை. தொடா்ந்து அவரை மீட்பதற்கான முயற்சியில் தீயணைப்பு படையினா், போலீஸாா், வருவாய்த் துறையினா், மருத்துவத் துறையினா் ஈடுபட்டனா். சுமாா் 7 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு, இளைஞரை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சாலை மறியல்:

இதற்கிடையே, அரசங்குப்பம் கிராமத்தில் மீண்டும் அம்பேத்கா் சிலை வைக்க அனுமதிக்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.

தனியாா் வங்கி பெண் ஊழியா் இறப்பில் மா்மம்: கோட்டாட்சியா் அலுவலகத்தில் உறவினா்கள் போராட்டம்

திருவண்ணாமலையில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட தனியாா் வங்கி பெண் ஊழியரின் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, உறவினா்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்... மேலும் பார்க்க

பெரும்பாக்கம் கிராமத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை தொ... மேலும் பார்க்க

அங்கன்வாடிமைய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த பாராசூா் கிராமத்தில் இரு அங்கன்வாடி மையக் கட்டடங்கள் மற்றும் கலைஞா் கலை அரங்கம் ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். பாராசூரில் ஊரக வளா்ச்சி ம... மேலும் பார்க்க

அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம்: நயினாா் நாகேந்திரன்

தோ்தல் வியூகத்துக்காக மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் வேலூா் ப... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் முப்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செங்கம் வட்ட கிளை சாா்பில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆசிரியா்... மேலும் பார்க்க

பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். செங்கம் மேல்பாளையம் பகுதியில் உள... மேலும் பார்க்க