செய்திகள் :

மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி: அமைச்சா் கே.என்.நேரு

post image

மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ‘மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் என்னவாயிற்று’ என்று கேள்வி எழுப்பினாா்.

அப்போது, அமைச்சா் கே.என்.நேரு குறுக்கிட்டு கூறியதாவது: கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் முதன் முதலாக கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட திட்டம். மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை எடுத்து செயல்படுத்திய நபா் சரியாக நடத்தவில்லை. 100 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம் என்பதிலிருந்து 60 லட்சமாகவும், பிறகு 40 லட்சம் லிட்டராகவும் குறைந்தது.

அப்படியும் சரியாகச் செயல்படாமல் இருந்ததால் அனைத்து இயந்திரங்களும் பழுதுபட்டது. அதில் பணியாற்றியவா்களுக்கு ஊதியம் தரவில்லை; நமக்கு தண்ணீரும் கிடைக்கவில்லை. அரசிடம் பணம் மட்டும் அவா் கேட்டாா். பணம் தர மறுத்த நிலையில், அந்த நபா் நீதிமன்றதுக்குச் சென்றாா். ரூ. 40 கோடி பணம் தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அவரை நம்பி அரசு பணம் தராது என்பதில் உறுதியாக இருந்தோம். தற்போது, அந்தப் பணிகளை அரசே மேற்கொள்ளும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் அங்கு உற்பத்தி தொடங்கும் என்றாா் அவா்.

தேனியில் என்கவுன்ட்டர்: காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் மரணம்!

தேனி: தேனி அருகே உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல் துறை அதிகாரிகள் இன்று(மார்ச் 29) சுட்டுப் பிடிக்க முற்பட்டதில் அந்த நபர் உயிரிழந்தார்... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு அனுமதிப்பதில்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்

வயநாடு: நாடாளுமன்ற நிகழ்வுகளை ஆளுங்கட்சியே முடக்க நினைக்கிறது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையான விமர்சனத்தை சுமத்தியுள்ளார். கேரளத்திலுள்ள தமது சொந்த தொகுதியான வயநாட்ட... மேலும் பார்க்க

திமுக vs தவெக: விஜய்யின் கருத்துக்கு இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?

பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் தங்களை அங்கீகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில்எடப்பாடி பழனிசாமி இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசினார்.... மேலும் பார்க்க

2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!

2026-ல் யார் தமிழக முதல்வராக வாய்ப்புள்ளது? என சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிக... மேலும் பார்க்க

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை! திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தேவதர்ஷினி, சென்னையில் தனியார் அகாதெமியில் படித்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் திடீர் தில்லி பயணம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கூட்டணி குறித்து ஆலோசித்து வருக... மேலும் பார்க்க