செய்திகள் :

மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்பும் ஏபிடி வில்லியர்ஸ்! ஆர்சிபியில் விளையாடுவாரா?

post image

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் மீண்டும் கிரிக்கெட் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ். 16 பந்துகளில் 50, 31 பந்துகளில் 100, 64 பந்துகளில் 150 ரன்கள் குவித்த சாதனைப் பட்டியலில் தன் பெயரை உயரத்தில் வைத்துள்ளார்.

கடந்த 2021 முதல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்த ஏபிடி வில்லியர்ஸ் தனது யூடியூப்பில் கிரிக்கெட் குறித்து விடியோ வெளியிட்டு வருகிறார்.

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட ஓய்வை அறிவித்ததாகக் கூறியிருந்தார். அவருக்கு ஆப்ரஹாம், ஜான் என்ற 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

40 வயதாகும் ஏபிடி வில்லியர்ஸுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 360 டிகிரியிலும் அடித்து விளையாடக்கூடிய மிகச் சிறந்த வீரர்.

யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது:

ஒருநாள் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன். ஆனால், எங்கு என்பது தெரியாது. எனகு குழந்தைகள் எனக்கு அழுத்தம் தருகிறார்கள். அவர்களால் நான் வலைப்பயிற்சிக்கு செல்கிறேன்.

எனது பையன் எனக்கு பந்துவீசும் உபகரணத்தில் பந்துவீசுவான். ஐபிஎல் அல்லது எஸ்ஏ20 விளையாட மாட்டேன். ஆனால், கேமிராக்களால் கவனம்பெறாத நிஜமான கிரிக்கெட் விளையாடுவேன். என்னுடைய ஈடுபாட்டான கிரிக்கெட்டை முடித்துவிட்டேன்.

வலது கண் நன்றாக வேலை செய்கிறது. இடதுகண் தான் சிறதி மங்கலாக இருக்கிறது. நான் எனது குழந்தைகளுக்காக மீண்டும் விளையாட விருக்கிறேன்.

ஆர்சிபி குறித்து பேசவில்லை. நான் மீண்டும் அந்த அழுத்தத்தை ஏற்க விரும்பவில்லை. நான் எங்கு சென்றாலும் எனக்கு ஜாலியாக இருக்க வேண்டும் என்றார்.

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிய ஐசிசி தலைவர்!

சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஐசிசி தலைவர் ஜெய் ஷா வழங்கினார்.51 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ள ரோஹித், கோலி: கௌதம் கம்பீர்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கி... மேலும் பார்க்க

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த விருத்திமான் சஹா!

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் விருத்திமான் சஹா அறிவித்துள்ளார்.இந்திய வீரரான விருத்திமான் சஹா, 141 முதல் தர போட்டிகளில் விளையாடி 7,169 ரன்கள் குவித்துள்ளா... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் பெத் மூனி சாதனை மேல் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி சாதனை மேல் சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக நடை... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியா அபாரம்: முதல் முறையாக முழுமையாக வெல்லப்பட்ட மகளிர் ஆஷஸ் தொடர்!

மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவடை... மேலும் பார்க்க

ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா

இந்திய அணியின் வெற்றிக்காக ரன்கள் குவிப்பது மிகவும் சிறப்பான உணர்வைத் தருவதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று (ஜனவரி 31) புண... மேலும் பார்க்க