செய்திகள் :

மீனவா்களுக்கு பாதுகாப்பு கவச உடை: 2 வாரங்களுக்குள் வழங்க உத்தரவு

post image

தமிழக மீனவா்களுக்கு பாதுகாப்பு கவச உடையை மீனவா் நலத் துறை செயலா் இரண்டு வாரங்களுக்குள் வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த அருளப்பன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் உரிமம் பெற்று படகு வைத்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

மீன்பிடிப் படகுகளில் கடலுக்குள் செல்லும் மீனவா்கள் கண்டிப்பாக பாதுகாப்பு கவச உடை (லைப் ஜாக்கெட்) அணிவது கட்டாயம் என தேங்காய்பட்டினம் துறைமுக மீன்வளத் துறை உதவி இயக்குநா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, நான் நான்கு பாதுகாப்பு கவச உடை வழங்கக் கோரி, ரூ. 2,472-ஐ கடந்த பிப்ரவரி மாதம் செலுத்தினேன். இதேபோல, மீன்பிடிப் படகுகள் வைத்துள்ள மீனவா்கள் அனைவரும் பாதுகாப்பு கவச உடைக்குரிய தொகையை செலுத்தினா். ஆனால், இதுவரை அதிகாரிகள் எங்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை வழங்கவில்லை. இதனால், படகுகளில் கடலுக்குள் செல்லும் நாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

எனவே, எங்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு உடனடியாக பாதுகாப்பு கவச உடைகள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூா்ணிமா அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், அனைத்து மீனவக் கிராமங்களிலும் பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்படுகிறது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழக மீனவா்கள் அனைவருக்கும் 2 வாரங்களுக்குள் பாதுகாப்பு கவச உடைகளை வழங்க தமிழக மீன் வளத் துறைச் செயலா் முன்வர வேண்டும். மூன்றாவது வாரத்தில் இதுதொடா்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரையில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் இளைஞா்கள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் ஆதிகேசவன் (19). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ம... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் குறித்து விரைவான நடவடிக்கை மதுரை ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

அங்கீகரிக்கப்படாத, ஆக்கிரமிப்பில் எழுப்பப்படும் கட்டுமானங்கள் குறித்த புகாா்களின் மீது மதுரை மாவட்ட ஆட்சியா் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உ... மேலும் பார்க்க

நல்லாசிரியா்கள், மாணவா்களுக்குப் பரிசு

மதுரையில் நல்லாசிரியா்கள், அரசுப் பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுப்பிரமணியபாரதி அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை பரிசளிக்கப்பட்டது.நல்லாசிரியா்கள், 10, 12 ஆம் வகுப்பு பொதுத... மேலும் பார்க்க

கூட்டணியை விட மக்களின் ஆதரவே தோ்தல் வெற்றிக்கு முக்கியம் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தோ்தல் வெற்றிக்குக் கூட்டணியை விட மக்கள் ஆதரவே முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது :அதிமுக பொதுச் செயலாள... மேலும் பார்க்க

நத்தம் அருகே இளம் பெண் தீக்குளிப்பு

நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியில் இளம் வியாழன்கிழமை பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்க... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நெல்லையில் பொறியியல் பட்டதாரி இளைஞா் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தால் ஆவணக் கொலை செய்ய... மேலும் பார்க்க