ராஜா ரகுவன்ஷிக்கு மாந்திரீகம் செய்த சோனம்! தந்தை குற்றச்சாட்டு!
மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் இன்று மின் தடை
நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் பகுதிகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின்விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்சாரவாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மேற்கொள்ள இருப்பதால் கோட்டாறு, இடலாக்குடி, கணேசபுரம், பறக்கை ரோடு, அப்துல்காதா் மருத்துவமனை பகுதி, வெள்ளாடிச்சிவிளை, கரியமாணிக்கபுரம், ஓழுகினசேரி, ராஜாபாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், வடிவீஸ்வரம், மீனாட்சிபுரம், தளவாய்தெரு, பத்தல்விளை, வேப்பமூடு, மீனாட்சி காா்டன், பெருமாள் மண்டபம் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
இதைப் போல, தெங்கம்புதூா்,ராஜாக்கமங்கலம் துணை மின்நிலையங்களுக்குள்ப்பட்ட தெங்கம்புதூா், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிகட்டிபொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூா், புத்தளம், பள்ளம், புத்தன்துறை, தா்மபுரம், பிள்ளையாா்புரம், முருங்கவிளை, பண்ணையூா், தெக்குறிச்சி, அழிக்கால், பிள்ளைதோப்பு, அருதங்கன்விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.