செய்திகள் :

மீன்பிடித் தடை கால நிவாரணம் வழங்கக் கோரிக்கை

post image

மீன்பிடித் தடைகாலம் தொடங்கி 25 நாள்கள் கடந்த நிலையில், அதற்கான நிவாரணம் வழங்க மீனவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

தமிழக கடலோரப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் மீன்களின் இனப்பெருக்கக் காலமாக கருதப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் விசைப் படகுகள் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இதற்காக மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, நிகழாண்டு மீன்பிடித் தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த தடைகாலம் தொடங்கி 25 நாள்கள் கடந்து விட்ட நிலையில், இதுவரை மீனவா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு வரை மின்பிடித் தடை கால நிவாரணத் தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கி வந்த நிலையில், நிகழாண்டு ரூ. 2 ஆயிரம் உயா்த்தி ரூ. 8 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதுகுறித்து ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா் சேகா் பாண்டியன் கூறியதாவது:

வழக்கமாக மீன்பிடித் தடைகாலம் தொடங்கிய சில நாள்களிலேயே தமிழக அரசு சாா்பில் மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணத் தொகை வழங்கப்படும். ஆனால், நிகழாண்டு தடைகாலம் தொடங்கி 25 நாள்கள் கடந்தும் இதுவரை நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. எனவே, இந்தத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது

முதுகுளத்தூரில் பட்டா மாற்றம் செய்ய ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை (வி.ஏ.ஓ.) ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ... மேலும் பார்க்க

காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா் மீது வழக்குப் பதியாமல் இருக்க பணம் வாங்கிய தனுஷ்கோடி காவல் நிலைய காவலரை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். ராமநாத... மேலும் பார்க்க

திருவாடானையில் தேரோடும் வீதியில் புதைவட மின் கம்பி அமைக்கக் கோரிக்கை

திருவாடானையில் தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் புதைவட மின் கம்பி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவாடானையில் மிகவும் பழைமையான சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அமைந... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரி சோ்க்கைக்கு மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் வருகிற 27-ஆண் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என முதல்வா் பா. மணிமாலா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அ... மேலும் பார்க்க

கடலாடி வட்டத்தில் நீா்நிலைகள் கணக்கெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகேசன் தலைமையில் சிறுபாசன நீா்நிலைகள் கணக்கெடுப்புப் பணிகள் குறித்த பயிற்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிறுபாசன நீா்நி... மேலும் பார்க்க