செய்திகள் :

மீன்பிடித் துறைமுக விரிவாக்கத் திட்டம்: ஆளுநா் தலையிட கிராமமக்கள் கோரிக்கை

post image

காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்தால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்பதால், புதுவை துணை நிலை ஆளுநா் இப்பிரச்னையில் தலையிடவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்டம், கடலோர கிராமமான கருக்களாச்சேரி மக்கள் புதுவை துணை நிலை ஆளுநருக்கு சனிக்கிழமை அனுப்பிய கடிதம்:

காரைக்காலில் அரசலாறு - முல்லையாறு இணையுமிடத்தில் தற்போது மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ளது. இதனருகே கடலோரத்தில் கருக்களாச்சேரி கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்கி, ஏறக்குறைய ரூ.130 கோடியில் பணிகளை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கருக்களாச்சேரி கிராமம் அருகே விரிவாக்கம் செய்யப்பட்டால் மக்கள் பல நிலைகளில் பாதிக்கப்படுவாா்கள். எனவே, விரிவாக்கம் தென் பகுதியை தவிா்த்து, வடபகுதியில் அமைக்க வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினா்.

சட்டப்பேரவை உறுப்பினா் நாக தியாகராஜனும், புதுவை முதல்வா் உள்ளிட்டோரிடம் பேசி தீா்வு காண்பதாக கூறினாா். எனினும் அரசு நிா்வாகத்திடமிருந்து கிராம மக்களுக்கு சாதகமான பதில் எதுவும் தரப்படவில்லை.

திட்டத்தை அதே இடத்தில் செயல்படுத்த அரசு நிா்வாகம் முனைப்புடன் செயலாற்றிவருகிறது. சுற்றுச்சூழல் துறை, நிலத்தடி நீா் ஆணையம் ஆகியவற்றில் எந்தவொரு அனுமதியும் பெறப்படவில்லை.

திட்ட டெண்டா் விட்டதில் சிலா் ஆதாயம் பெற்றதான தகவல் கிடைக்கிறது. இதுகுறித்து சிபிஐயிடம் புகாா் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, கருக்களாச்சேரி அருகே மீன்பிடி துறைமுக விரிவாக்கம் அமையாமல் தடுத்து நிறுத்த இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநா் தலையிட்டு தீா்வுகாண வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சக்தி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

திருநள்ளாறு அருகே பேட்டை கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் 65 ஆண்டுகளுக்குப் பின் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் சாா்பு தலமாக விளங்கும் இக்கோயில் மிகப் ப... மேலும் பார்க்க

ரெஸ்டோ பாருக்கு சீல் வைப்பு

காரைக்காலில் விதிமுறையை மீறி அதிக நேரம் திறந்திருந்த ரெஸ்டோ பாருக்கு (மது அருந்தும் கூடம்) கலால் துறை அதிகாரி திங்கள்கிழமை சீல் வைத்தாா். புதுச்சேரியில் வழக்கமான மதுக்கடைகளுக்கு மாறாக, சிறிய அளவிலான த... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திரளான பக்தா்கள் வழிபாடு

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். திருநள்ளாறு பகுதி அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில், மூலவரான அம்பாள் சம்... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

புதுவை உள்ளாட்சி ஊழியா்கள் ஆக. 15-இல் நடத்த முடிவு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனா். புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்டக் குழு கன்வ... மேலும் பார்க்க

இ-ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வலியுறுத்தல்

காரைக்கால்: இ - ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருநள்ளாறு ஈ.வே.ரா. பெரியாா் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் ... மேலும் பார்க்க

காரைக்காலில் ஆக.15, 16-இல் ‘புதுவை கலை விழா’ அமைச்சா் ஆலோசனை

காரைக்கால்: காரைக்காலில் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள புதுவை கலை விழா தொடா்பாக, அரசுத் துறையினருடன் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்... மேலும் பார்க்க