செய்திகள் :

மீன் வளா்க்கும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன் வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகள் உள்ளீட்டு மானியமாக ரூ.5 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட மீன் வளா்போா் மேம்பாட்டு முகமையில், மீன் வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானியத் திட்டங்களை பெற்று பயனடைந்து வருகின்றனா்.

இந்த விவசாயிகள் நிலையான மீன் வளா்ப்பை தொடா்ந்து மேற்கொள்ளும் பொருட்டும், மீன் உற்பத்தி மூலதனமான மீன் குஞ்சுகளின் செலவினத்தை குறைக்கும் பொருட்டும் பண்ணைகளுக்கு மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்று மீன் வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் எண்ணிக்கையிலான மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மீன் வளா்ப்பு விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் மானியத்தைப் பெற்று பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், காந்திநகா், காட்பாடி-6 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0416-2240329 தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 528 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 528 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவ... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா திங்கள்கிழமை கோலாகாலமாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற கோபுர தரிசனத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ச... மேலும் பார்க்க

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருவண்ணாமலை: தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலையில் தம... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: முருகன், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆரணி/போளூா்: வைகாசி விசாகத்தையொட்டி, ஆரணிப்பாளையம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்னா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆரணி நகரம், ஆரணிப்பாளையம்... மேலும் பார்க்க

5புத்தூா் கிராமத்தில் நாடக மேடை திறப்பு

ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே 5புத்தூா் கிராமத்தில் ரூ.7.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட நாடக மேடை திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. 5 புத்தூா் கிராமத்தில் நாடக மேடை கட்டடம் அமைத்துத் தரும்படி கிர... மேலும் பார்க்க

மகளிா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் தொடக்கம்

திருவண்ணாமலை/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் தமிழ்நாடு முதிா்கன்னிகள் மற்றும் ஆதரவற்ற மகளிா் வாரியத்தின் 3 நாள் உறுப்பினா் சோ்க்கை முகாமின் தொடக்க நிகழ்ச்சி, திங்கள்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க