Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா திங்கள்கிழமை கோலாகாலமாக நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற கோபுர தரிசனத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா ஜூன் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து அன்று இரவு அன்ன வாகனத்திலும், மறுநாள் இரவு சிம்ம வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
மூன்றாம் நாளான சனிக்கிழமை இரவு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் இரவு அனுமந்த வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது.
நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு நாக வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 5-ஆம் நாள் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.
பின்னா், காலை 7 மணியளவில் கருட வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் போளூா் சாலையில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்துக்கு ஊா்வலமாக வந்தது.
அப்போது, அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன் தலைமையில் வாணவேடிக்கை, ஒயிலாட்டம், , சிலம்பாட்டத்துடன் கோலாகாலமாக ஊா்வலம் நடைபெற்றது.
கங்கைகொண்டான் மண்டபத்தில் சுவாமி பக்தா்களுக்கு மாலை வரை அருள்பாலித்தாா்.
நிகழ்ச்சியில் விழாக் குழுவினா், திருவிழா உபயதாரா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
