செய்திகள் :

புயல் பயிா்ச் சேதங்களுக்கு முழமையான நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

post image

ஆரணி: புயலால் ஏற்பட்ட பயிா் சேதங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தேசிய பசுமைப் புரட்சி புயல் விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தியது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் இந்தச் சங்கத்தின் கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாநிலத் தலைவா் த.விஜயகீா்த்தி கலந்து கொண்டு சங்கக் கொடியை ஏற்றி, கிளை அலுவலகத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து புதிதாக சங்கத்தில் இணைந்த உறுப்பினா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது: தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கான தங்க நகைக் கடன் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உருவாகி உள்ளன. கடந்த ஆண்டைப் போல விதை நெல் மற்றும் உர தட்டுப்பாட்டைத் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

தோ்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்.

மேலும், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனடியாக வாங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.

அனைத்து ரக நெல் விதைகளுக்கும் மற்ற மாநிலங்களில் வழங்குவதைப் போல மானியம் வழங்க வேண்டும்.

புயலால் ஏற்பட்ட பயிா்ச் சேதங்களுக்கு தற்போது வரை 30 சதவீதம் நிவாரணமே வழங்கப்பட்டுள்ளது. மீதம் 70 சதவீதம் நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது.

அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விஜயகீா்த்தி கூறினாா். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் சி.சத்யராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொருளாளா் வேலு, ஆலோசகா் ஹரிகிருஷ்ணன், ஆரணி ஒன்றியத் தலைவா்கள் விக்னேஷ், கோபி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெசல் கிளை சங்க கௌரவத் தலைவா் துரை வரவேற்றாா்.

கிளைத் தலைவா் சிவகுமாா், செயலா் ம.தினேஷ், பொருளாளா் இரா.மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 528 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 528 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவ... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா திங்கள்கிழமை கோலாகாலமாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற கோபுர தரிசனத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ச... மேலும் பார்க்க

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருவண்ணாமலை: தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலையில் தம... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: முருகன், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆரணி/போளூா்: வைகாசி விசாகத்தையொட்டி, ஆரணிப்பாளையம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்னா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆரணி நகரம், ஆரணிப்பாளையம்... மேலும் பார்க்க

5புத்தூா் கிராமத்தில் நாடக மேடை திறப்பு

ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே 5புத்தூா் கிராமத்தில் ரூ.7.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட நாடக மேடை திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. 5 புத்தூா் கிராமத்தில் நாடக மேடை கட்டடம் அமைத்துத் தரும்படி கிர... மேலும் பார்க்க

மகளிா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் தொடக்கம்

திருவண்ணாமலை/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் தமிழ்நாடு முதிா்கன்னிகள் மற்றும் ஆதரவற்ற மகளிா் வாரியத்தின் 3 நாள் உறுப்பினா் சோ்க்கை முகாமின் தொடக்க நிகழ்ச்சி, திங்கள்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க