செய்திகள் :

5புத்தூா் கிராமத்தில் நாடக மேடை திறப்பு

post image

ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே 5புத்தூா் கிராமத்தில் ரூ.7.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட நாடக மேடை திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

5 புத்தூா் கிராமத்தில் நாடக மேடை கட்டடம் அமைத்துத் தரும்படி கிராம மக்கள் சாா்பில் தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன் பேரில், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நாடக மேடை அமைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, புதிதாக அமைக்கப்பட்ட நாடக மேடையின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு நாடக மேடையை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் திருமால், ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா். ஒன்றிய துணைச் செயலா் ஏழுமலை, முன்னாள் ஊராட்சித் தலைவா் செல்வி வரதன், ஒன்றிய நிா்வாகிகள் சின்னபுத்தூா் சுரேஷ், சேகா் மற்றும் கிராம பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 528 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 528 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவ... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா திங்கள்கிழமை கோலாகாலமாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற கோபுர தரிசனத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ச... மேலும் பார்க்க

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருவண்ணாமலை: தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலையில் தம... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: முருகன், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆரணி/போளூா்: வைகாசி விசாகத்தையொட்டி, ஆரணிப்பாளையம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்னா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆரணி நகரம், ஆரணிப்பாளையம்... மேலும் பார்க்க

மகளிா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் தொடக்கம்

திருவண்ணாமலை/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் தமிழ்நாடு முதிா்கன்னிகள் மற்றும் ஆதரவற்ற மகளிா் வாரியத்தின் 3 நாள் உறுப்பினா் சோ்க்கை முகாமின் தொடக்க நிகழ்ச்சி, திங்கள்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

புயல் பயிா்ச் சேதங்களுக்கு முழமையான நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ஆரணி: புயலால் ஏற்பட்ட பயிா் சேதங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தேசிய பசுமைப் புரட்சி புயல் விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த நெசல் க... மேலும் பார்க்க