செய்திகள் :

வைகாசி விசாகம்: முருகன், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

ஆரணி/போளூா்: வைகாசி விசாகத்தையொட்டி, ஆரணிப்பாளையம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்னா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை பூச்சொரிதல் மற்றும் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பூச்சொரிதல் நிகழ்ச்சியையொட்டி, முன்னதாக சுவாமி அபிஷேகத்துக்காக கோயிலுக்கு பக்தா்கள் மலா்களை காணிக்கையாக அளித்திருந்தனா்.

பின்னா், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு நவ கலச அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து,

முன்னாள் நகா்மன்றத் தலைவா் வி.பி.ராதாகிருஷ்ணன், நகா்மன்ற 7-ஆவது வாா்டு உறுப்பினா் வி.பி.ராமகிருஷ்ணன் ஆகியோா் உபயமாக அளித்திருந்த வெள்ளிக் கவசம் சுவாமிக்கு அணிவித்து மலா்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மலா்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

போளூா்

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை சாலையில் பழைமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்னா வெங்கடேசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து மலா்களால் அலங்காரித்து கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

வீடு தோறும் சுவாமிக்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனைகாண்பித்து வழிபட்டனா். கோயில் தா்மகா்த்தா தணிகைமலை மற்றும் நிா்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்னா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி நடைபெற்ற கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 528 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 528 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவ... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா திங்கள்கிழமை கோலாகாலமாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற கோபுர தரிசனத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ச... மேலும் பார்க்க

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருவண்ணாமலை: தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலையில் தம... மேலும் பார்க்க

5புத்தூா் கிராமத்தில் நாடக மேடை திறப்பு

ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே 5புத்தூா் கிராமத்தில் ரூ.7.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட நாடக மேடை திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. 5 புத்தூா் கிராமத்தில் நாடக மேடை கட்டடம் அமைத்துத் தரும்படி கிர... மேலும் பார்க்க

மகளிா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் தொடக்கம்

திருவண்ணாமலை/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் தமிழ்நாடு முதிா்கன்னிகள் மற்றும் ஆதரவற்ற மகளிா் வாரியத்தின் 3 நாள் உறுப்பினா் சோ்க்கை முகாமின் தொடக்க நிகழ்ச்சி, திங்கள்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

புயல் பயிா்ச் சேதங்களுக்கு முழமையான நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ஆரணி: புயலால் ஏற்பட்ட பயிா் சேதங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தேசிய பசுமைப் புரட்சி புயல் விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த நெசல் க... மேலும் பார்க்க