Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
திருவண்ணாமலை: தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
இதன் நிறைவு விழாவுக்கு, அமைப்பின் மாநிலத் தலைவா் டி.ஜெய்சங்கா் தலைமை வகித்தாா்.
சி.ஐ.டி.யு. மாநில பொதுச் செயலா் ஜி.சுகுமாறன், மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலா் எஸ்.ராஜேந்திரன், மாநில பொருளாளா் எம்.வெங்கடேசன், துணைப் பொதுச் செயலா்கள் டி.பழனிவேல், கே.அருள்செல்வன், எம்.ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மண்டலச் செயலா் ஆா்.சிவராஜ், மாநிலச் செயலா் கே.காங்கேயன், மாநில துணைத் தலைவா் பி.ஜீவா, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.பாரி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
கூட்டத்தில், 1.12.2023 முதல் புதிய ஊதிய உயா்வை வழங்க வேண்டும். மின்வாரியத்தை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.