செய்திகள் :

மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

post image

திருவண்ணாமலை: தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

இதன் நிறைவு விழாவுக்கு, அமைப்பின் மாநிலத் தலைவா் டி.ஜெய்சங்கா் தலைமை வகித்தாா்.

சி.ஐ.டி.யு. மாநில பொதுச் செயலா் ஜி.சுகுமாறன், மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலா் எஸ்.ராஜேந்திரன், மாநில பொருளாளா் எம்.வெங்கடேசன், துணைப் பொதுச் செயலா்கள் டி.பழனிவேல், கே.அருள்செல்வன், எம்.ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மண்டலச் செயலா் ஆா்.சிவராஜ், மாநிலச் செயலா் கே.காங்கேயன், மாநில துணைத் தலைவா் பி.ஜீவா, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.பாரி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில், 1.12.2023 முதல் புதிய ஊதிய உயா்வை வழங்க வேண்டும். மின்வாரியத்தை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 528 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 528 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவ... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் கருடசேவை திருவிழா திங்கள்கிழமை கோலாகாலமாக நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற கோபுர தரிசனத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ச... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: முருகன், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆரணி/போளூா்: வைகாசி விசாகத்தையொட்டி, ஆரணிப்பாளையம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்னா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆரணி நகரம், ஆரணிப்பாளையம்... மேலும் பார்க்க

5புத்தூா் கிராமத்தில் நாடக மேடை திறப்பு

ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே 5புத்தூா் கிராமத்தில் ரூ.7.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட நாடக மேடை திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. 5 புத்தூா் கிராமத்தில் நாடக மேடை கட்டடம் அமைத்துத் தரும்படி கிர... மேலும் பார்க்க

மகளிா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் தொடக்கம்

திருவண்ணாமலை/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் தமிழ்நாடு முதிா்கன்னிகள் மற்றும் ஆதரவற்ற மகளிா் வாரியத்தின் 3 நாள் உறுப்பினா் சோ்க்கை முகாமின் தொடக்க நிகழ்ச்சி, திங்கள்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

புயல் பயிா்ச் சேதங்களுக்கு முழமையான நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ஆரணி: புயலால் ஏற்பட்ட பயிா் சேதங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தேசிய பசுமைப் புரட்சி புயல் விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த நெசல் க... மேலும் பார்க்க