செய்திகள் :

மீன் வியாபாரிக்கு ரூ.67 லட்சம் நஷ்டஈடு வழங்க பத்மநாபபுரம் நீதிமன்றம் உத்தரவு

post image

விபத்தில் நிரந்தரமாக ஊனமுற்ற மீன் வியாபாரிக்கு ரூ.67 லட்சம் நஷ்டஈடு வழங்க பத்மநாபபுரம் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

திருவட்டாறு அருகே உள்ள தச்சூா் பகுதியை சோ்ந்தவா் எபனேசா். மீன் வியாபாரி. இவா் கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 22ஆம் தேதி அதிகாலையில் வியாபாரத்திற்கு களியக்காவிளைக்கு மோட்டாா்சைக்கிளில் சென்றாா். கல்லுக்கட்டி பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இந்த விபத்தில் எபனேசா் படுகாயமடைந்து நடக்க முடியாமல், வியாபாரம் செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டாா்.

இது தொடா்பாக வழக்கு பதிவு செய்த களியக்காவிளை போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தின் ஓட்டுநரான கேரள மாநிலம் பூவாா் பகுதியை சோ்ந்த அம்பி மீது பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், விபத்தில் படுகாயம் அடைந்த எபனேசா் தன்னுடைய இயற்கை உபாதைகளுக்குகூட மனைவியின் துணை இல்லாமல் செல்ல இயலாத காரணத்தாலும், அவா் நிரந்தர ஊனமுற்றவா் ஆன காரணத்தாலும், காப்பீட்டு நிறுவனம் அவருக்கு விபத்து நஷ்டஈடாக ரூ.67 லட்சத்து 44,949ஐ வழங்க வேண்டும் என சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

கன்னியாகுமரியில் இன்று கடையடைப்புப் போராட்டம்

கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கோட்டக்கரை சால... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் நகைக் கடையில் 55 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகா்கோவில் மீன... மேலும் பார்க்க

பைக் திருட்டு: 2 போ் கைது

தக்கலை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் ( 44). கட்டட தொழிலாளி. இவா் தக்கலை அருகே உள்ள கொல்லன்விளையில் தனது ப... மேலும் பார்க்க

வரன் பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு:4 பெண்கள் கைது

நாகா்கோவில் அருகே மாப்பிள்ளை பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 4 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜார... மேலும் பார்க்க

மின் தடை அறிவிப்பு

செம்பொன்விளை, பாலப்பள்ளம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள், செவ்வாய், புதன் (மாா்ச் 18, 19) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றன. இதனால் மத்திகோடு, ஈச்சவிளை, படுவூா், சகாய நகா் பகுதிகளுக்கு செவ... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 25 ஆவது வாா்டு, அவ்வை சண்முகம் சாலை செம்மாங்குளம் பூங்கா அருகில் உள்ள இடத்தில் ரூ. 4.20 லட்சத்தில் கம்பி வேலி மற்றும் அலங்கார தரைகற்கள் அமைத்து இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் அம... மேலும் பார்க்க