செய்திகள் :

மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை

post image

கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவமொக்கா மாவட்டம், பத்ராவதி பழைய நகரப் பகுதியில் செப். 8-ஆம் தேதி மீலாது நபி ஊர்வலத்திற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட சில இளைஞர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் செவ்வாய்க்கிழமை வேகமாகப் பரவியது. இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து சிவமொக்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.கே.மிதுன்குமார் கூறுகையில், "மீலாது நபி ஊர்வலம் தொடர்பான காணொலியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடும் காட்சிகள் உள்ளன. இது தொடர்பாக பழைய நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காணொலியை யார், எங்கிருந்து படம்பிடித்தனர் என்பதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்வோம்' என்றார்.

இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள பாஜக, காங்கிரஸ் அரசின் ஆதரவு இருப்பதால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கூறுகையில், "இதுபோன்ற உணர்வுகள் அதிகரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் அரசின் ஆதரவு இருப்பதால் இப்படிப்பட்டமுழக்கங்கள் எழுப்பப்படுகின்றன' என்றார் அவர்.

பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா, "இது தேசத்துரோக செயல். காங்கிரஸ் அரசின் செயல்திட்டமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஊக்கத்தால் விதானசெüதாவிலேயே பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து வீதிகளில் தேசத்துரோகிகள் முழக்கம் எழுப்புகிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார்.

மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு

கர்நாடக மாநிலம், மத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக விடுத்த அழைப்பின்பேரில் முழு அடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மண்டியா மாவட்டம்,... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரைப் போல பேசி கர்நாடக ஆளுநரை ஏமாற்ற முயற்சி

தொலைபேசியில் மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானைப் போல பேசி கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை ஏமாற்ற முயற்சி நடந்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை செப்.6}... மேலும் பார்க்க

மல்லிகாா்ஜுன காா்கே விவசாயிகளை அவமதித்துவிட்டாா்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விவசாயிகளை அவமதித்துவிட்டாா் என்று மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல... மேலும் பார்க்க

பாலியல் பலாத்கார வழக்கு: சிறையில் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி

பெங்களூரு: பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.525 வழங்க... மேலும் பார்க்க

விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது கல்வீச்சு, பதற்றம்: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

மத்தூா்: மண்டியா மாவட்டம், மத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது மசூதியில் இருந்து கல்வீசப்பட்டதால், கலவரச்சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து திங்கள்கிழமை பாஜகவி... மேலும் பார்க்க

பாஜக முன்னாள் அமைச்சா் மீது மானநஷ்ட வழக்கு தொடா்ந்தாா் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்

தா்மஸ்தலா விவகாரத்தின் பின்னணியில் தான் இருப்பதாக தெரிவித்திருந்த பாஜக முன்னாள் அமைச்சா் ஜனாா்தன ரெட்டிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மானநஷ்ட வழக்கு தொடா்ந்துள்ளாா். தா்மஸ்தலா கோயிலு... மேலும் பார்க்க