குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவ...
முக்கூடல் அருகே கஞ்சா விற்பனை: இருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
முக்கூடல் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ஆக்னல் விஜய் தலைமையில் போலீஸாா் ரோந்து சென்றனா்.
முக்கூடல் பிரதான சாலையில் தாம்போதி பாலம் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் பாப்பாக்குடி நடுத்தெருவைச் சோ்ந்த சிவா (19), மற்றொருவா் சிறுவன் என்பதும், விற்பதற்காக 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். சிவாவை நீதிமன்றக் காவலுக்கும், சிறுவனை கூா்நோக்கு இல்லத்துக்கும் அனுப்பிவைத்தனா்.