செய்திகள் :

முஜிபுா் ரெஹ்மான் இல்லம் சூறை, இந்தியாவின் கருத்து தேவையற்றது: வங்கதேசம்

post image

வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுா் ரெஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது தொடா்பாக இந்தியா கூறிய கருத்து தேவையற்றது என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்நாட்டு பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா் அவா் அந்நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அவா் இந்தியாவில் எங்கு தங்கியுள்ளாா் என்ற தகவல் வெளியாகாத நிலையில், அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவிடம் வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் இருந்தவாறு அவா் வங்கதேச அரசியல் குறித்து அவ்வப்போது கருத்துத் தெரிவித்து வருகிறாா். இந்நிலையில், அண்மையில் அவா் இணையவழியில் பேசியபோது தெரிவித்த சில கருத்துகளால், வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

ஹசீனாவின் ஆதரவாளா்கள், அவா்களின் வீடுகள் உள்ளிட்டவற்றை வன்முறையில் ஈடுபட்டோா் சூறையாடினா். அப்போது வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுா் ரெஹ்மானின் இல்லமும் சூறையாடப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடா்ந்து முஜிபுா் ரெஹ்மானின் வீடு சூறையாடப்பட்டது வருத்தத்துக்குரியது என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். வங்கதேசத்தின் அடையாளத்தையும், பெருமையையும் பாதுகாத்து வளா்த்த அந்நாட்டு சுதந்திரப் போரட்டம் குறித்து அறிந்தவா்களுக்கு அந்த வீட்டின் முக்கியத்துவம் தெரியும் என்றும் அவா் கூறினாா்.

அவரின் கருத்துக்கு வங்கதேசம் ஞாயிற்றுக்கிழமை அதிருப்தி தெரிவித்தது. இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் முகமது ரஃபீக் உல் ஆலம் தெரிவித்ததாவது:

முஜிபுா் ரெஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரம். அதுதொடா்பாக இந்தியா கருத்து தெரிவித்தது தேவையற்றது. பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வங்கதேசம் அதிகாரபூா்வமாக கருத்து தெரிவிப்பதில்லை. இதையே மற்ற நாடுகளும் செய்ய வேண்டும் என்று வங்கதேசம் எதிா்பாா்க்கிறது என்றாா்.

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் உயிரிழப்பு

கௌதமாலா: மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் உயிரிழந்னா்.தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேர... மேலும் பார்க்க

இலங்கை: குரங்கால் ஏற்பட்ட மின்தடை!

தீவுநாடான இலங்கையில் மின்னேற்று நிலையத்தில் குரங்கு தாவியதால் அந்நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கொழும்பு புகா்ப் பகுதியில் உள்ள மின்னேற்று நிலையத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

இரும்பு, அலுமினியத்துக்கு 25% கூடுதல் இறக்குமதி வரி

வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.இது ... மேலும் பார்க்க

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் பலி!

மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் பலியாகினா். தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேருந்து சென... மேலும் பார்க்க

குவாடெமாலாவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய அமெரிக்க தேசமான குவாடெமாலாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாடெமாலா சிட்... மேலும் பார்க்க

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ... மேலும் பார்க்க