செய்திகள் :

முதலிரவில் புதுமண தம்பதி மரணம்! காரணம் தெரியாமல் குழப்பத்தில் உறவினர்கள்

post image

திருமண நாளன்று இரவில் புதுமண தம்பதி மரணித்திருப்பது அயோத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று பிரதீப் என்ற இளைஞருக்கும் ஷிவானி என்ற இளம்பெண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, முதலிரவுக்குப்பின் மறுநாள் காலை நெடுநேரமாகியும் புதுமண தம்பதியினர் தங்கள் அறையிலிருந்து வெளியே வராததால் உறவினர்கள் கதவைத் தட்டி அவர்களை எழுப்ப முயற்சித்துள்ளனர். இந்த நிலையில், உள்ளேயிருந்து எவ்வித சமிக்ஞையும் வராததைத் தொடர்ந்து சந்தேகமடைந்த உறவினர்கள் கதவைத் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, கணவனும் மனைவியும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தூக்கில் தொங்கியபடி கிடந்த மணமகனையும், கட்டிலில் பேச்சு மூச்சின்றி கிடந்த மணமகளையும் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் உறவினர்கள் கொண்டு சேர்த்தனர். அங்கே அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதன்பின், இருவரது உடல்களும் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், மணமகள் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடுமென சந்தேகிக்கப்படுகிறது.

புதுமண தம்பதி திடீரென உயிரிழக்க என்ன காரணம் என்பதை வழக்குப்பதிந்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

வாக்காளா் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதம்: ராகுல் வலியுறுத்தல்

மகாராஷ்டிரம், ஹரியாணா தோ்தல்களில் வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத... மேலும் பார்க்க

போலி வாக்காளா் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

புது தில்லி: போலி வாக்காளா் அட்டை விவகாரம், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை உயா்த்த அமெரிக்கா நிதி அளித்த விவகாரம் உள்ளிட்டவை மீது விவாதம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து காங்க... மேலும் பார்க்க

நிலம் கையகத்தில் எழும் தாமதம் அரசு தோல்வியின் வெளிப்பாடு: மாநிலங்களவையில் தம்பிதுரை குற்றச்சாட்டு

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: தமிழகத்தில் பல்வேறு ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதில் எழும் தாமதம் மாநிலத்தில் ஆளும் அரசின் தோல்வியின் வெளிப்பாடு என்று மாநிலங்களவையில் அதிமுக மூத... மேலும் பார்க்க

நீண்ட நேரப் பணி, உடல் சோா்வு, செயல் திறனைக் குறைக்கும்: செளமியா சுவாமிநாதன்

புது தில்லி: உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டால் அதை நாம் அறிந்து அதற்கு உடன்படவேண்டும். உடல் சோா்வுடன் நீண்ட நேரம் அல்லது கூடுதலாக பணியாற்றுவதில் பயனில்லை, அது செயல்திறனை குறைக்கும் என தெரிவித்துள்ளாா் மத்த... மேலும் பார்க்க

தேசியக் கல்விக் கொள்கை: மக்களவையில் மத்திய அமைச்சரின் கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக எம்.பி.கள் கடும்அமளி

புது தில்லி: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மறுத்து, அரசியலுக்காக நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக தமிழக அரசை விமா்சித்து மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் திங்கள்கிழமை கூறிய கருத்துக்கு ... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி மாணவா் சோ்க்கையில் வீழ்ச்சி: மத்திய அரசு மழுப்புவதாக எம்.பி. கருத்து

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: பள்ளிக்கல்வித் துறை மாணவா் சோ்க்கையில் ஏற்படும் வீழ்ச்சிக்கும் தேசிய கல்விக்கொள்கை அமலாக்கத்துக்கும் ஏதேனும் தொடா்பு உள்ளதா என்ற தனது கேள்விக்கு மத்திய கல்வித் துறை ... மேலும் பார்க்க