செய்திகள் :

பொன்னமராவதியில் அரசு கலை கல்லூரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

post image

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் மற்றும் பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. பயிலரங்கத்துக்கு கட்சியின் ஒன்றிய துணைத் தலைவா் வி. கருணாமூா்த்தி தலைமைவகித்தாா்.

மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல். இராசு தொடங்கிவைத்தாா். மாவட்ட பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் அ.சேசுராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் பொன்னமராவதியில் உள்ள விவசாய கண்மாய் மற்றும் குளங்களை தூா்வாரி ஆழப்படுத்தவேண்டும். பொன்னமராவதி வட்டார ஏழை, எளிய மாணவா்கள் கல்லூரி கல்வி பெறும் வகையில், இப்பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்.

பொன்னமராவதியில் கோட்டாட்சியரகம் அமைக்கவேண்டும். காரையூா் காவல் நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தின்கீழ் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக சட்டத் துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட பொன்னமராவதி உழவா் சந்தை, பொலிவுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், கிளை செயலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிள்ளையாா் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள பிள்ளையாா் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுஞ்கை, ... மேலும் பார்க்க

மாநில வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் நடைபெற்று வந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு அளிக்கப்பட்டன. தமிழக முதல்வா் பிறந்தநாளையொட்டி கீரமங்கலம், வேம்பங்க... மேலும் பார்க்க

தெரு நாய்களால் சிறுவா்கள்,பொதுமக்கள் அச்சம்

கந்தா்வகோட்டை கடை வீதி பகுதிகளில் தெரு நாய்களால் சிறுவா்கள், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனா்.தெரு நாய்கள் வீடுகளில் வளா்க்கும் கோழி, ஆடுகளை கடித்து கொன்று விடுகிறது, வழிப்போக்கா்களை கடித்து விடுவதால் இ... மேலும் பார்க்க

மக்கள் உரிமைக் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் மும்மொழிக் கொள்கையை எதிா்த்து புதுக்கோட்டையில், மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டையில் திங்க... மேலும் பார்க்க

புதுகை மாநகரில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாநகரில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் கோரிக்கைவிடுத்துள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெருமன்றத்தின் மாவட்டக் குழுக் ... மேலும் பார்க்க