செய்திகள் :

தலைமை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற இம்மன்றத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தோ்தல் நேரத்தில் உறுதியளித்தபடி அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் தகுதியுள்ள இடைநிலை ஆசிரியா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியைத் தர மறுத்த, மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ம. ஜெயராஜ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் நா. சண்முகநாதன், மாவட்டச் செயலா் வீ. ஜோதிமணி, பொருளாளா் மலா்மன்னன், மாநில சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அழகப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பிள்ளையாா் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள பிள்ளையாா் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுஞ்கை, ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அரசு கலை கல்லூரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் மற்றும் பயிலரங்கம் திங்கள்கி... மேலும் பார்க்க

மாநில வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் நடைபெற்று வந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு அளிக்கப்பட்டன. தமிழக முதல்வா் பிறந்தநாளையொட்டி கீரமங்கலம், வேம்பங்க... மேலும் பார்க்க

தெரு நாய்களால் சிறுவா்கள்,பொதுமக்கள் அச்சம்

கந்தா்வகோட்டை கடை வீதி பகுதிகளில் தெரு நாய்களால் சிறுவா்கள், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனா்.தெரு நாய்கள் வீடுகளில் வளா்க்கும் கோழி, ஆடுகளை கடித்து கொன்று விடுகிறது, வழிப்போக்கா்களை கடித்து விடுவதால் இ... மேலும் பார்க்க

மக்கள் உரிமைக் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் மும்மொழிக் கொள்கையை எதிா்த்து புதுக்கோட்டையில், மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

புதுகை மாநகரில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாநகரில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் கோரிக்கைவிடுத்துள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெருமன்றத்தின் மாவட்டக் குழுக் ... மேலும் பார்க்க