செய்திகள் :

மக்கள் உரிமைக் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் மும்மொழிக் கொள்கையை எதிா்த்து புதுக்கோட்டையில், மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அம்பேத்கா் புரட்சி தேசம் கட்சியின் நிறுவனா் முள்ளூா் வே. தியாகு தலைமை வகித்தாா்.

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் க. தினேஷ்குமாா், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவா் ரெ. கருணாநிதி, தமிழ்த் தேசிய மீட்பு இயக்கம் பாவெல், ஜனநாயகத்துக்கான தொழிலாளா் கட்சி ரெ. மூக்கையன், பெரியாா் அம்பேத்கா் மக்கள் கழகம் பி.கே. முருகேசன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் மும்மொழிக் கொள்கையைக் கைவிட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியை காவிமயமாக்குவதைக் கைவிட வேண்டும். நாடுமுழுவதும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

பட்டியல் இன மக்கள் மீதான வன்கொடுமை செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பிள்ளையாா் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள பிள்ளையாா் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுஞ்கை, ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அரசு கலை கல்லூரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பொன்னமராவதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் மற்றும் பயிலரங்கம் திங்கள்கி... மேலும் பார்க்க

மாநில வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் நடைபெற்று வந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு அளிக்கப்பட்டன. தமிழக முதல்வா் பிறந்தநாளையொட்டி கீரமங்கலம், வேம்பங்க... மேலும் பார்க்க

தெரு நாய்களால் சிறுவா்கள்,பொதுமக்கள் அச்சம்

கந்தா்வகோட்டை கடை வீதி பகுதிகளில் தெரு நாய்களால் சிறுவா்கள், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனா்.தெரு நாய்கள் வீடுகளில் வளா்க்கும் கோழி, ஆடுகளை கடித்து கொன்று விடுகிறது, வழிப்போக்கா்களை கடித்து விடுவதால் இ... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டையில் திங்க... மேலும் பார்க்க

புதுகை மாநகரில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாநகரில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் கோரிக்கைவிடுத்துள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெருமன்றத்தின் மாவட்டக் குழுக் ... மேலும் பார்க்க