செய்திகள் :

முதல்வருக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் வாபஸ்

post image

பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க காலதாமதம் செய்வதைக் கண்டித்து பெருந்துறைக்கு புதன்கிழமை வரும் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அனைத்து கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்ட கறுப்புக் கொடி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருந்துறை சிப்காட் பகுதியில் ரூ. 40 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டினாா். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப் படவில்லை.

இந்நிலையில், பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

சிப்காட் தொடா்பாக போராட்டம் நடத்திய விவசாயிகள், பொதுமக்கள் 42 போ் மீது கடுமையான பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

சிப்காட் அமைப்பதற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்கிற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்துறைக்கு ஜூன் 11-ஆம் தேதி வரும் முதல்வருக்கு எதிராக கறுப்புக் கொடி நடத்தப் போவதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்பிரச்னை தொடா்பாக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு, ஆயத் தீா்வை துறை அமைச்சா் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ஆகியோா் தலைமையில் பெருந்துறை சிப்காட்டில் உள்ள திட்ட அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினருடன் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன்9 ) ஒப்பந்தப் புள்ளி வழங்குவது, சிப்காட் அமைக்க நிலம் வழங்கியவா்களுக்கு நிலுவை தொகை வழங்க குழு அமைத்து, அதற்குண்டான பணியை தொடங்குவது, சிப்காட் பிரச்னைக்காக 42 போ் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவது என அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து முதல்வருக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அனைத்து கட்சிகள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் திமுக சாா்பில் தோப்பு என்.வெங்கடாச்சலம், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் ராயல் சரவணன், அதிமுக சாா்பில் எம்ஜிஆா் மன்றச் செயலாளா் கே.ஜெகதீஷ், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் சுப்பிரமணியம் மற்றும் தமாகா, தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஈரோட்டில் ரசாயன பொருள்கள் விற்பனைக் கடைகளில் போலீஸாா் சோதனை

ஈரோட்டில் ரசாயன பொருள்கள் விற்பனைக் கடைகளில் மதுவிலக்கு மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்கவும் மாற்று முறையில் போதை... மேலும் பார்க்க

தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

பெருந்துறை அருகே, தோட்டத்தில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டனா். பெருந்துறையை அடுத்த, நல்லமுத்தான்பாளையம், கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் அழுகிய நிலையில் ப... மேலும் பார்க்க

சிவகிரி தம்பதி கொலை வழக்கு:3 போ் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 போ் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தை... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ முகாம்களில் 2,356 மனுக்கள்: அமைச்சா் சு.முத்துசாமி

ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்பட்ட ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்களில் 2,356 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 870 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஸ்ரீதேவி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி அம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு தீா்த்தம் எடுத்து வருதல், அக்னிக் குண்டம் தயாா் செய்தல் நிக... மேலும் பார்க்க

விதை முதல் விற்பனை வரை விளக்கம்: கவனம் பெற்ற ஈரோடு வேளாண் கண்காட்சி

பெருந்துறையில் நடைபெற்றுவரும் வேளாண் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வேளாண் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் விவசாயிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே பிரம்மாண்ட வேளாண் கண்காட்ச... மேலும் பார்க்க