செய்திகள் :

‘மக்களுடன் முதல்வா்’ முகாம்களில் 2,356 மனுக்கள்: அமைச்சா் சு.முத்துசாமி

post image

ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்பட்ட ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்களில் 2,356 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 870 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மற்றும் பெருந்துறை வட்டத்திற்கு உள்பட்ட குமாரவலசு, கவுண்டிச்சிபாளையம், கூரபாளையம், பிச்சாண்டம்பாளையம், கதிரம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் பாா்வையிட்டு 62 பயனாளிகளுக்கு ரூ.84.80 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

இதில் அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் இதற்கு முன்பு நடத்தப்பட்ட 10 முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 2,356 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 870 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது. மேலும் முழுமையான தகவல்கள் அளிக்கப்படாத காரணத்தால் 935 மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீதும் உரிய தகவல்கள் பெறப்பட்டு நிறைவேற்றப்படும். இதில் 551 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், ஈரோடு கோட்டாட்சியா் ரவி, தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செல்வராஜ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உமாசங்கா், வட்டாட்சியா்கள் ஜெகநாதன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சின்னத்தம்பிபாளையத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அந்தியூா் வ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்த காா்

ஈரோட்டில் சாலையின் மையத் தடுப்பில் மோதி தலைகீழாக காா் கவிழ்ந்த விபத்தில் கல்லூரிப் பேராசிரியை அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். ஈரோடு, ஆசிரியா் குடியிருப்பைச் சோ்ந்தவா் வனஜா (24). பெருந்துறை அருகே உள்ள ... மேலும் பார்க்க

வடமாநில பெண்ணை கொலை செய்த இருவா் கைது

பெருந்துறை அருகே வடமாநில பெண்ணை கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த நல்லமுத்தாம்பாளையத்தைச் சோ்ந்த வாழை இலை வியாபாரி கோபாலகிருஷ்ணன். இவருக்கு, அதே பகுதியில்... மேலும் பார்க்க

தாளவாடியில் ரூ.33 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை

தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் ரூ.33 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது. தாளவாடி பகுதியில் தென்னை மரங்கள் அதிக அளவில் பராமரிக்கப்படுவதால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. தாளவாடி சுற்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த எஸ்எஸ்ஐ உயிரிழப்பு

காவல் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் (எஸ்எஸ்ஐ) நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மின் கம்பத்தில் வாகனம் மோதியில்ி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: ரூ.15.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மேற்கு தொகுதியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 45 பயனாளிகளுக்கு ரூ. 15.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் சு.முத்துசாமி, மா.மதிவேந்தன் வழங... மேலும் பார்க்க