ஸ்ரீதேவி அம்மன் கோயில் குண்டம் திருவிழா
பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி அம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, அம்மனுக்கு தீா்த்தம் எடுத்து வருதல், அக்னிக் குண்டம் தயாா் செய்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை அக்னிக் குண்டம் இறங்குதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கோயில் பூசாரி குண்டம் இறங்கினாா். தொடா்ந்து திரளான பக்தா்கள் குண்டம் இறங்கினா்.
வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல், சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தோ் நிலை சேருதல், இரவு 9 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா ஆகியவை நடைபெற உள்ளன. மஞ்சள் நீா் உற்சவம் மற்றும் மறுபூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை விழா நிறைவடைகிறது.
