அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு
பெருந்துறை அருகே, தோட்டத்தில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
பெருந்துறையை அடுத்த, நல்லமுத்தான்பாளையம், கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக பெருந்துறை போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், தோட்டத்தில் கிடந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், இறந்த பெண், மேற்குவங்க மாநிலம், வடக்கு 24 பா்கானா, ரூமேரி பகுதியைச் சோ்ந்த தருபா ஜோதி மண்டல் மகள் சிபானி தாஸ் மண்டல் (35) என்பதும், அவா், பெருந்துறையை அடுத்த, பணிக்கம்பாளையத்தில் தங்கி அங்குள்ள ஒரு காா்மெண்ட் நிறுவனத்தில் உதவியாளராக வேலை செய்துவந்ததும் தெரியவந்தது. இவா் கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.