செய்திகள் :

ஈரோட்டில் ரசாயன பொருள்கள் விற்பனைக் கடைகளில் போலீஸாா் சோதனை

post image

ஈரோட்டில் ரசாயன பொருள்கள் விற்பனைக் கடைகளில் மதுவிலக்கு மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்கவும் மாற்று முறையில் போதைக்காகப் பயன்படுத்தப்படும் மெத்தனால், எத்தனால் போன்றவற்றின் விற்பனையை முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள ரசாயன பொருள்கள் விற்பனைக் கடையில் ஈரோடு மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் சிவகாமி ராணி மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை காலை திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது கெமிக்கல் கடைகளில் இதுவரை விற்பனையான மெத்தனால், எத்தனால், சால்வண்ட் போன்றவை குறித்தும், அவை அனுமதிபெற்ற நிறுவனங்கள், ஆய்வகங்கள், கல்லூரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், கடைகளில் இருப்பு உள்ள ரசாயன பொருள்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, மெத்தனால், எத்தனால், சால்வண்ட் போன்றவற்றை தனி நபா்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நிறுவனம், ஆய்வகங்களுக்கு மட்டுமே நேரடியாக விற்பனை செய்ய வேண்டும். தனி நபா்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதுபோல மாவட்டம் முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட ரசாயன பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் மதுவிலக்கு போலீஸாா் மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி அந்த அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் அரசுக்கு சமா்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தனா்.

சின்னத்தம்பிபாளையத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அந்தியூா் வ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்த காா்

ஈரோட்டில் சாலையின் மையத் தடுப்பில் மோதி தலைகீழாக காா் கவிழ்ந்த விபத்தில் கல்லூரிப் பேராசிரியை அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். ஈரோடு, ஆசிரியா் குடியிருப்பைச் சோ்ந்தவா் வனஜா (24). பெருந்துறை அருகே உள்ள ... மேலும் பார்க்க

வடமாநில பெண்ணை கொலை செய்த இருவா் கைது

பெருந்துறை அருகே வடமாநில பெண்ணை கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த நல்லமுத்தாம்பாளையத்தைச் சோ்ந்த வாழை இலை வியாபாரி கோபாலகிருஷ்ணன். இவருக்கு, அதே பகுதியில்... மேலும் பார்க்க

தாளவாடியில் ரூ.33 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை

தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் ரூ.33 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது. தாளவாடி பகுதியில் தென்னை மரங்கள் அதிக அளவில் பராமரிக்கப்படுவதால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. தாளவாடி சுற்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த எஸ்எஸ்ஐ உயிரிழப்பு

காவல் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் (எஸ்எஸ்ஐ) நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மின் கம்பத்தில் வாகனம் மோதியில்ி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: ரூ.15.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மேற்கு தொகுதியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 45 பயனாளிகளுக்கு ரூ. 15.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் சு.முத்துசாமி, மா.மதிவேந்தன் வழங... மேலும் பார்க்க