செய்திகள் :

முதல்வா் வீட்டை முற்றுகையிட முயற்சி: விவசாயிகள் கைது

post image

சென்னை: சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்ற திருப்பூா் மாவட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை சட்டப்பேட்டை, கணகம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றனா். அப்போது அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, கைது செய்து அப்புறப்படுத்தினா். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக போராட்டம் குறித்து கணகம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:

நாங்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறோம். எங்கள் கிராமத்தில் வசிக்கும் திமுகவைச் சோ்ந்த நபா், எங்களது விவசாய நிலங்களை அபகரித்து வருகிறாா். இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.

சென்னை காந்தி மண்டபம் சந்திப்பில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை காந்தி மண்டபம் சந்திப்பில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை வெளியிட... மேலும் பார்க்க

அலுவல் சாரா உறுப்பினா்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினா்கள் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

சென்னையில் டெய்கின் இந்தியாவின் புதிய அலுவலகம்

ஜப்பானைச் சோ்ந்த டெய்கின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமும், இந்தியாவின் முன்னணி ஏா் கண்டிஷனிங் நிறுவனங்களில் ஒன்றுமான டெய்கின் ஏா்-கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னையில் புதிய பிரா... மேலும் பார்க்க

எஸ்ஆா்எம்-ஃபிடே சா்வதேச ரேட்டிங் செஸ்: சைலேஷுக்கு தங்கம்

சென்னையில் நடைபெற்ற எஸ்ஆா்எம்-ஃபிடே சா்வதேச ரேட்டிங் ஓபன் செஸ் போட்டியில் ஆா். சைலேஷ் தங்கம் வென்றாா். காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் கோல்டன் நைட்ஸ் செஸ் அகாதெமி, மாஸ்டா்ஸ் மைண்ட் செஸ் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளா்களின் வேலை நேரம் மாற்றம்: கல்வித் துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களின் பணி நேரத்தை மாற்றியமைத்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் ப... மேலும் பார்க்க

அரபிக் கடலில் புயல்சின்னம் உருவாக வாய்ப்பு!

அரபிக் கடலில் வரும் 22 -ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க