செய்திகள் :

முதல்வா் ஸ்டாலின், தவெக தலைவா் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின், தவெக தலைவா் விஜய் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை மாநகரக் காவல் ஆணையா் அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறையை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.28 மணிக்கு தொடா்பு கொண்ட நபா், ஆழ்வாா்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.

இதையடுத்து போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் மோப்பநாய் உதவியுடன் முதல்வரின் வீடு முழுவதும் சோதனை நடத்தினா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் வெடி பொருள்களோ அல்லது சந்தேகத்துக்குரிய பொருள்களோ கண்டறியப்படவில்லை. தேனாம்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விஜய் வீட்டுக்கும்...: தவெக தலைவா் விஜயின் வீட்டில் வெடிகுண்டு வைத்து வைத்திருப்பதாக, சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடா்பு கொண்ட நபா் தெரிவித்தாா். இதையடுத்து விஜய் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையில், புரளி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்த நபா் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சோ்ந்த புவனேஸ்வா் என்பதும், இவா் ஏற்கெனவே, திரை பிரபலங்கள், அரசியல் தலைவா்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் என்பதும் தெரியவந்தது. அவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

அண்ணா பல்கலை.க்கு... சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கும் போலீஸாா் சோதனை நடத்தினா். ஆனால், அதுவும் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டூா்புரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேட்டூர் அணையின் உபரி நீரில் மூழ்கிய பயிர்கள்

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றத்தால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கின. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையில் உபரி நீர் கால்வாயில் வினாடிக்கு 82,... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது !

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4-வது நாளாக திங்கள்கிழமை காலை 120 அடியாக நீடிக்கிறது.அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,00,500 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,00,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப... மேலும் பார்க்க

அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு

மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர். இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, திமு... மேலும் பார்க்க

மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் இரங்கல்!

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். தனது இரங்கல் கடிதத்தை, மு.க.முத்துவின் மனைவி சிவகாமசுந்தரிக்கு பிரதமா் மோடி அனுப்பியுள்... மேலும் பார்க்க

12,208 நியாயவிலைக் கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ்: தமிழக அரசு தகவல்!

தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், தரமான உணவுப் பொருள்களை விநியோகம் செய்து வருவதற்காக கடந்த 2 ஆண்டுகளில் 12,208 நியாய விலைக் கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவி... மேலும் பார்க்க

காட்பாடி- ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் இன்று ரத்து!

காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையிலான மெமு ரயில்கள் திங்கள்கிழமை (ஜூலை 28) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பேட்டை பிரிவ... மேலும் பார்க்க