செய்திகள் :

``நான் இந்தியா-பாக் தாக்குதலையே நிறுத்தியவன்; இது ரொம்ப ஈசி'' தாய்லாந்து-கம்போடியா குறித்து ட்ரம்ப்

post image

'இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நான் தான் நிறுத்தினேன்' - இது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் பதிவு செய்து வரும் ஒரு விஷயம். அவர் இப்படி கூறிய கூற்றின் எண்ணிக்கை 25-ஐ தாண்டி விட்டது.

மோடி - ட்ரம்ப் போன்கால்

ட்ரம்ப்
ட்ரம்ப்

கடந்த மாதம், இந்திய பிரதமர் மோடி - ட்ரம்ப் பேசிய போன்காலில், 'ட்ரம்ப் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தவில்லை' என்பது தெளிவாக அவருக்கு சொல்லப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகும் இன்னமும் அவர், அந்தக் கூற்றை விடுவதாக இல்லை.

தாய்லாந்து - கம்போடியா தாக்குதல் தொடங்கியப்போதே, இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை உவமையாக காட்டியிருந்தார்.

ட்ரம்ப் என்ன கூறினார்?

இந்த நிலையில், நேற்று, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பேசும்போது, "நாம் தாய்லாந்து மற்றும் கம்போடியா உடன் நிறைய வணிகம் செய்து வருகிறோம்.

இன்னமும் அவர்கள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பதைப் படிக்கிறேன். இது எனக்கு மிகவும் எளிதான விஷயம் என்று கூறுகிறேன். காரணம், நான் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தி உள்ளேன்.

நான் இரு நாட்டு பிரதமர்களுக்கும் போன் செய்தேன். இந்தப் போரை நிறுத்தவில்லை என்றால் அவர்களுடனான வணிக ஒப்பந்தத்தை நிறுத்துவேன் என்று கூறினேன்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அதன் பின், இந்தப் போரை நிறுத்த அவர்கள் விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியாவும், பாகிஸ்தானும் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக இருந்தார்கள்.

ஆக, இந்த மாதிரியான விஷயங்களை, என்னால் வணிகத்தைப் பயன்படுத்தி நிறுத்த முடியுமானால், அது என்னுடைய கௌரவம்" என்று கூறியுள்ளார்.

இன்னும் எத்தனை தடவை ட்ரம்ப் இந்தக் கூற்றை முன்வைப்பாரோ?

Operation Mahadev: ``ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்..'' - இந்திய ராணுவம் சொல்வதென்ன?

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதற்கு பதிலடியாக, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தி, பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. மே 7-ம் தேதி தொடங்கிய இந்த... மேலும் பார்க்க

14 ஆண்டுகளுக்குபிறகு மாதோஸ்ரீ இல்லத்தில் ராஜ் தாக்கரே... உத்தவ் தாக்கரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு நேற்று பிறந்தநாள். இதனையடுத்து சிவசேனா(உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரேயின் இல்லமான மாதோஸ்ரீயில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்திருந்தனர். ... மேலும் பார்க்க

``நாட்டின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்த ஒரு மறைவிடமும் பாதுகாப்பானது கிடையாது'' - மோடி

கங்கை கொண்ட சோபுரத்தில் நடைபெற்ற இராஜேந்திர சோழன் திருவாதிரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள பொன்னேரியில் அ... மேலும் பார்க்க

MK Stalin: தொண்டர்களின் வாழ்த்துகளுடன் வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடை பயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து. சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

`கண்கவர் வண்ண விளக்குகள்' - தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் | Photo Album

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் தூத்துக்குடி விமான நிலையம் புதிய முனையம்.! மேலும் பார்க்க