செய்திகள் :

ஜெர்மனியில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் 3 பேர் பலி; பலர் காயம்

post image

ஜெர்மனியில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

தென்மேற்கு ஜெர்மனியில் ரிட்லிங்கன் மற்றும் முண்டர்கிஙன் நகரங்களுக்கு இடையே பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றன.

இதில் 3 பேர் பலியான நிலையில் பலர் காயமடைந்தனர்.

விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே காயமடைந்தவர்களை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஹெலிகாப்டர்கள் வந்தன. மேலும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உ.பி. கோவிலில் கூட்டநெரிசல்: இருவர் பலி; 30 பேர் காயம்!

விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று போலீஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. அப்பகுதியில் கடுமையான புயல்கள் வீசியதால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஜெர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிக்மாரிங்கன் நகரிலிருந்து உல்ம் நகருக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது, காட்டுப் பகுதியில் தடம் புரண்டது.

Three people were killed and several others injured when a regional passenger train derailed in a wooded area in southwestern Germany on Sunday, police said.

இந்த நூற்றாண்டின் நீண்ட சூரியகிரகணம் எப்போது? 6 நிமிடங்கள் உலகமே இருளில்!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி நிகழவிருப்பதாகவும், அப்போது ஐரோப்பா, வட ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் க... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா!

தாய்லாந்து - கம்போடியா நாடுகளுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. தாய்லாந்து - கம்போடியா எல்லை தொடர்பான பிரச்சனையில் இரு நாடுகளுக்கு இடையே போர... மேலும் பார்க்க

மருந்துச்சீட்டைக்கூட 'குரோக் ஏஐ' படிக்கும்! - எலான் மஸ்க்

மருந்துச்சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக்கூட 'குரோக் ஏஐ' படிக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 'குரோக்' சாட்பாட்டை கடந்த 2023ல் அ... மேலும் பார்க்க

தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் உள்ள சந்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தார். சடுசக் பகுதியில் இயங்கிவரும் காய்கறி சந்தையில் மக்கள் வழக்கம்போல் பரபரப்பாகப் பொருள்களை வாங்கிக்கொ... மேலும் பார்க்க

சீனாவில் கடுமையான நிலச்சரவு! நான்கு பேர் பலி; 8 பேர் மாயம்

வடக்கு சீனாவின் ஹீபேய் மாகாணத்தில் பெய்து கனமழை காரணமாக ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர். 8 பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.லௌன்பிங் கௌண்டி கிராமத்தில் நே... மேலும் பார்க்க

கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்: 21 போ் பலி!

கிழக்கு காங்கோவில் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற ‘ஜனநாயகப் படை கூட்டணி (ஏடிஎஃப்)’ கிளா்ச்சிக் குழுவினா் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 21 போ் கொல்... மேலும் பார்க்க