செய்திகள் :

மேட்டூர் அணையில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

post image

மேட்டூர் அணையில் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் உபரி நீர் போக்கியான 16 கண் பாலத்தில் உள்ள தூண்களை வலுப்படுத்தும் பணி ரூ.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மூன்று மதங்களுக்கு சாரம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வெள்ளநீர் முதல் நான்கு மதகுகள் வழியாக வெளியேற்றப்படவில்லை.

மீதம் உள்ள 12 மதகுகள் வழியாக மட்டுமே வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. நான்கு மதகுகளில் தண்ணீர் வெளியேற்ற படாத நிலையில் உபரி நீர் போக்கி மதகுகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சிவகுமார் ஆய்வு செய்தார். அணையின் வலது கரை, இடது கரை, உபரி நீர் போக்கி, சுரங்க கால்வாய் அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசும் போது, கடைமடை வரை தண்ணீர் வந்து சேரவில்லை என்று கூறுவது சரியானது அல்ல. மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்ட மக்கள் தண்ணீரை குறைக்க வலியுறுத்துகின்றனர். மேட்டூர் அணை கட்டுமான பணி துவங்கி நூறாண்டுகள் நிறைவடைவதால் நினைவுத்தூண் கட்டுவதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேட்டூர் அணை பூங்காவை புனரமைக்க அரசு அனுமதிக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

நீர் வரத்து தற்போது தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதே நிலையில் நீர்வரத்தை கையாள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆம்பூர் சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

மேட்டூர் அணை வலுவாக உள்ளது. எங்கெங்கு மராமத்து பணிகள் நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் மராமத்து பணிகள் நடைபெறும் என்றார். ஆய்வின்போது மேல் காவிரி வழிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற் பொறியாளர் மதுசூதனன் உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Sivakumar, the Chief Engineer of the Trichy Zone Water Resources Department, conducted an inspection at the Mettur Dam.

கங்கைகொண்ட சோழபுரம்: திமுக - பாஜகவின் அரசியல் ஆதாய நாடகம்! விஜய் விமர்சனம்

கங்கைகொண்ட சோழபுரம் கோவில் விவகாரத்தில் திமுக, பாஜகவை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிச... மேலும் பார்க்க

நீதி கிடைக்கும்வரை கவினின் உடலை வாங்க மாட்டோம்: பெற்றோர் திட்டவட்டம்

திருநெல்வேலியில் ஆணவப் படுகொலைச் சம்பவத்தில், சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கிடைக்கும்வரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோர் த... மேலும் பார்க்க

பாக்கியலட்சுமி வெறும் தொடர் அல்ல; பாடம்: நடிகை நேகா நெகிழ்ச்சி

பாக்கியலட்சுமி வெறும் தொடர் மட்டுமல்ல; மறக்க முடியாத நினைவுகளுடன் கூடிய பாடம் என நடிகை நேகா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பாக்கியலட்சுமி தொடருடன் பணியாற்றியுள்ளதாகவும், நடிப்பின்... மேலும் பார்க்க

சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்: ராஜேந்திர பாலாஜி

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிடுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சிவகாசி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி கண்கலங்கி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000: முதல்வர்

புதுச்சேரியில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பி... மேலும் பார்க்க

திருச்சியில் பள்ளி முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு!

திருச்சியில் தனியார் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. திருச்சியில் பிரபல கேம்பியன் மேல்நிலைப்பள்ளியில் 1995 ஆம் ஆண்டு 90 மாணவர்கள் பயின்றனர், அவர்கள் அங... மேலும் பார்க்க