செய்திகள் :

உ.பி. கோவிலில் கூட்டநெரிசல்: இருவர் பலி; 30 பேர் காயம்!

post image

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோவிலில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் இரண்டு பேர் பலியாகினர். மேலும், பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் காயமடைந்தனர்.

பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஔசனேஷ்வர் மகாதேவ் கோவிலில் ஆடி மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமை முன்னிட்டு நீராடும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அதிகாலை 2 மணியளவில் உயர் மின்னழுத்தக் கம்பியின் மீது குரங்குகள் குதித்ததில், அந்த கம்பிகள் அறுந்து கோவிலின் கொட்டகை மீது விழுந்துள்ளது. இதனால், மின்சாரம் பாயும் அபாயத்தில் பக்தர்கள் அங்கும் இங்கும் ஓடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

உடனடியாக கோவில் வளாகத்தில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 2 மணிநேர பரபரப்புக்கு பின், பக்தர்கள் வரிசையில் நின்று வழக்கம்போல் தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே, கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Two people were killed and 30 others, including women and children, were injured in a stampede at a temple in Uttar Pradesh early Monday morning.

இதையும் படிக்க : வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: இமாச்சலின் குழந்தையாக அறிவிப்பு

விமான விபத்து: தன்னைக் கேடயமாக்கி மகனைக் காத்த தாய்.. இப்போது தோல் கொடுத்து!

ஏர் இந்தியா விமானம், பிஜே மருத்துவக் கல்லூரி மீது விழுந்தபோது, தன்னுடைய எட்டுமாதக் குழந்தை, தன்னையே கேடயமாக்கிக் கொண்டு பாதுகாத்தார் மணீஷா கச்சாடியா.இப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந... மேலும் பார்க்க

இதுவரை ஏன் எதிர்க்கவில்லை? - நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் உள் விசாரணையை ஏன் எதிர்க்கிறீர்கள் என நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தில்லியில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் ... மேலும் பார்க்க

ஆச்சரியம் ஆனால் உண்மை.. நாகப் பாம்பைக் கடித்த சிறுவன் உயிர்பிழைத்த அதிசயம்!

நாகப் பாம்பைக் கடித்து அதன் ஒருபகுதியை விழுங்கிய சிறுவன் உயிர்பிழைத்த அதிசயம் பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. சம்பாரண் மாவட்டத்தின் மோச்சி பங்கட்வா என்ற கிராமத்தில் கடந்த விழாயன்... மேலும் பார்க்க

நாய் பாபு, S/o, குட்டா பாபு! நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ்! பரபரப்பைக் கிளப்பும் பிகார்!

பிகாரில் நாய் பாபு என்ற பெயரில் ஒரு இருப்பிடச் சான்றிதழ், புகைப்படத்துடன், நாயின் பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட சான்றிதழ் வழஙகப்பட்டுள்ளது பிகாரில் பெரும் பரபரப்பைக்... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்திற்கு பிரதமர் வருவதில்லை; அமித் ஷா அரிதாகவே வருவார்: திருச்சி சிவா

நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார். பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில... மேலும் பார்க்க

ராஜஸ்தான் பள்ளியில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து சிறுவன் பலி!

ராஜஸ்தானில் உள்ள அரசுப் பள்ளியின் வாயிலில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் ஆறு வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜலாவரில் அரசுப் பள்ளி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததி... மேலும் பார்க்க