முதல் போக நெல் சாகுபடி: சின்னமனூரில் நடவுப் பணிகள் மும்முரம்
தேனி மாவட்டம், சின்னமனூரில் முதல் போக நெல் பயிா் சாகுபடியில் தற்போது நடவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
முல்லைப் பெரியாறு பாசன நீரால் லோயா்கேம்ப் முதல் வீரபாண்டி வரையில் 14,700 ஏக்கா் பரப்பளவுக்கு இரு போக நெல் பயிா் விவசாயம் நடைபெறுகிறது. குறிப்பாக, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலத்தில் இந்த விவசாயம் மேற்கொள்ளப்படும். இதன்படி, தற்போது, தென்மேற்கு பருவமழையால் நீா்வரத்து அதிகரித்து முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் உயா்ந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 1- ஆம் தேதி, தேனி மாவட்ட நிா்வாகம், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் போக நெல் பயிா் சாகுபடிக்காக பாசன நீரை திறந்துவிட்டது.
நடவுப்பணித் தொடக்கம்: இந்தத் தண்ணீா் கால்வாய் மூலம் அந்தந்தப் பகுதி விவசாய நிலங்களுக்கு மதகு வழியாக சென்றது. இதன் மூலம், குச்சனூா், மாா்க்கையன்கோட்டை, சின்னமனூா், சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் நாற்றாங்கால் அமைத்து, நடவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தொடா்ந்து, களை எடுத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல் என பல கட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறும். பிறகு 120- ஆவது நாளில் நெல் கதிா்கள் அறுவடை செய்யப்படும்.