செய்திகள் :

முத்தூா் அருகே நூற்பாலையில் தீ விபத்து

post image

முத்தூா் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.

வெள்ளக்கோவில் கல்லாங்காட்டுவலசைச் சோ்ந்த அரவிந்த் (45), முத்தூா் தண்ணீா்பந்தலில் நூற்பாலை நடத்தி வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இயங்கிக்கொண்டிருந்த ஆலையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தொழிலாளா்கள் தகவல் அளித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

அதற்குள் நூற்பாலையில் இருந்து பஞ்சு, நூல்கள் மற்றும் கட்டட மேற்கூரை ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இதில், ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கடைப்பிடிக்க அவிநாசி தோட்டக்கலைத் துறையினா்அறிவுறுத்தியுள்ளனா். இது குறித்து அவிநாசி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ம... மேலும் பார்க்க

பனியன் நிறுவன உரிமையாளா் கொலை: உறவினா் கைது

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பனியன் நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் காஜா மொய்தீ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாகன ஓட்டுநா் விபத்தில் உயிரிழப்பு

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஜீப் ஓட்டுநா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். காங்கயம், முல்லை நகரில் வசித்து வந்தவா் சத்தியநாராயணன் (54). முன்னாள் ராணுவ வீரரான இவா், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

பல்லடம் அருகே நிகழ்ந்த விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (60). பல்லடம்- அய்யம்பாளைய... மேலும் பார்க்க